28 December 2006

51 : தமிழர் கப்பற்கலை


தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.


தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரை ஒன்றின் ஒரு பகுதி இது. தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்த ஆர்வம் உள்ளவர்கள் தயவு செய்து இந்த சுட்டியைக் சொடுக்கி இந்தக் கட்டுரையை மேலும் பெரிதாக்கவும்.

27 December 2006

50 : விஸ்டா வருகின்றார்!!!!

அந்தா வருது இந்தா வருது என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்த விஸ்டா ஆபரேட்டிங் சிஸ்டம் கடைசியாக உத்தியோக பூர்வமாக ஜனவரி 30 ல் வர உள்ளது.

இதில் சிறப்பான விடையம் என்னவெனில் விஸ்டாவுடன் ஆபீஸ் 2007 ம் இணைக்கப்பட்டுள்ளதாம். ம்ஹூம்... எல்லாம் மைக்ராசாப்டின் சந்தைப்படுத்தல் தந்திரம். இதே வழியில்தான் அன்று நெட்ஸ்கேப் நவிகேட்டர் வீழ்த்தப்பட்டது.


பிருத்தானியா மைக்ராசாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபிரேசர் கருத்துத் தெரிவிக்கயில் இந்த இயங்குதளம் மைக்ராசாப்ட்டின் மற்றய இயங்கு தளங்களைவிட மிக வேகமாக விற்றுத் தீர்க்கும் என்று கூறினார். அத்துடன் அடுத்த சில வருடங்களில் 100 மில்லியனுக்கு அதிகமான கணனிகளில் விஸ்டா இயங்குதளம் பயன்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

விஸ்டா இயங்குதளத்தின் எதிர்கால வெற்றிக்கு பிரதானமாக மூன்று செயற்பாடுகள் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

1. Underlying Engineering (Encryption, Capability)
2. Functionality – (e.g. Integrated search ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் வசதி)
3. Graphics – It’s visually stunning கண்களைக் கொள்ளை கொள்கின்றது.

விஸ்டாவின் பயன்படும் வரைகலை மக் ஓஸ் போன்று அழகானதாகவும் பயனருக்கு இலகுவில் கையாளக் கூடியதாகவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. வின்டோசுக்கு முதலே மக் ஓ.ஸ் வரைகலை பயனர் இடைமுகத்தைப் (Graphical User Interface) பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியான விஸ்டா பீட்டாவின் மூலம் மைக்ரோசாப்ட் இந்த இயங்குதளத்தில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது.

எது எதுவாயினும் முறையான டெஸ்டிங் செய்யாமல் எந்த நிறுவனமும் கண்ணை மூடிக்கொண்டு விஸ்டாவிற்கு மாறாது என்பதுதான் உண்மை.

1 December 2006

49 : சிங்களத்தில் ஹரிபோட்டர் புத்தகம் (Harry Potter)


உலகப் புகழ் பெற்ற ஹரிப்போட்டர் நாவலை சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்களக் குளந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்... இது போல டின் டின் புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!!



தமிழ் ஆர்வலர்களே நீங்கள் எப்போது??

24 November 2006

48 : ஈழத் தமிழர் பற்றி ஒரு ஒலிப்பதிவு

எம்பி3/ MP3 வடிவில் பதிவிறக்க




powered by ODEO

ஏற்கனவே எழுத்தில் போட்ட பதிவு இப்போ ஒலியில் கேட்டுப்பாருங்களேன்....

14 November 2006

47 : கணனிக் கன்னி

காலை 10 மணியளவில் குளியலறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டேன். மனது குதூகலமாகவே இல்லை. கண்கள் எரிந்து கொண்டே இருந்தன. வெளியே சூரிய தேவரும் தன் பாட்டுக்கு வெப்பத்தை இலவசமாக அள்ளி வாரிக்கொண்டு இருந்தார். நேற்று வரை வாட்டிய சிக்கண் குணியாவில் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. தலையும் தன் பாட்டுக்கு அப்பப்போ சுர் என்றது.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் புறப்பட்டால்தான் அங்குபோய்ச் சேரலாம் என்று யோசித்துக்கொண்டேன். குளித்து முடித்து வெளியில் வந்ததும் அம்மா வந்து முன்னால் நின்றார்.
“தம்பி! அப்ப நாங்கள் என்னமாதிரி வாறது?”

“அ.... நான் இப்ப போகோணும் பெற்றோர்மார் பிறகு வரலாம். முன்று மணிக்குத்தானே நிகழ்ச்சிகள் தொடங்கும்...” நான் சொன்னேன்.

“அப்ப சரி! நீ முன்னுக்குப் போ நாங்கள் பின்னால வாறம்”

அவசரம் அவசரமாக நீளக் காட்சட்டையை மாட்டிக்கொண்டேன். பின்பு டை, சப்பாத்து ஜெல் என அனைத்தையும் மறக்காமல் அணிந்துகொண்டேன். கண்ணாடி முன்னால் நின்று ஒரு தடவை பார்த்துக்கொண்டேன். “ம்... என்னதான் சொன்னாலும் என்ட பழைய பர்சனாலிட்டியை இந்தக் கோதாரி விழுந்த சிக்கன் குனியா அழிச்சுப் போட்டுது” மனதுக்குள் பொறுமிக்கொண்டேன். (டேய் அடங்குடா ஓவரா அறுக்காத என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது)

அடுத்து கீழே வந்து கடிகாரத்தைப் பார்த்தபோது நேரம் 11:30 சாட்டுக்கு சோற்றை வாய்க்குள் தள்ளிவிட்டு கைகளை அலம்பிக்கொண்டு புறப்பட்டேன்.

பிருத்தானியக் கணனிச் சங்கம் வருடா வருடம் பட்டமளிப்பு விழாவை நடத்தும். பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக இந்த சங்கத்தின் பாடநெறியை நானும் படிக்கின்றேன். இறுதியில் நான் ஒரு லண்டன் பட்டதாரியாகும் வாய்ப்புக் கிடைக்கும். நான் இப்போது முதலாவது கட்டத்தில் சித்தியெய்தியுள்ளேன். பட்டம் பெற இன்னும் இரண்டு மட்டங்கள் தாண்ட வேண்டும். மாணவர்களைப் பாராட்டவும் மேலும் தொடர்ந்து படிக்க ஊக்குவிக்கவும் பட்டம் பெறுவோருடன் எமக்கும் சான்றிதள்கள் வழங்கவுள்னர். அதற்காகத்தான் நான் இந்தப் பறப்பு பறந்துகொண்டு இருந்தேன்.

வீதியால் நடக்கத் தொடங்கினேன். கடும் வெயில் ஆயினும் கவனம் முழுவதும் விரைவில் சென்று பஸ்தரிப்பு நிலையத்தை அடைந்து விட வேண்டும் என்பதுதான்.

நடந்துகொண்டு இருந்தபோதுதான் தெரிந்தது. அழைப்பிதழை எடுக்கும் அவசரத்தில் அடையாள அட்டையை விட்டுவிட்டு வந்துவிட்டேன். வீடு திரும்பிச் சென்று எடுத்து வருவது என்றால் இன்னுமொரு அரைமணிநேரம் அழிந்துவிடும். எடுக்காமல் சென்றால் எங்கயாவது நடுவழியில் படையினரின் சோதனை நடவடிக்கையில் மாட்டி சிறைச்சாலையில் இருக்கவேண்டியதுதான்.

எதற்கும் துணிந்துவிட்டேன்.. நடப்பது நடக்கட்டும். பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.

176 ம் இலக்க பஸ்சில் ஏறினேன் அது மரதானை வழியாகப் பொறளை சென்றது. பொறளையில் இறங்கி 154 எடுத்து பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தை அடைந்தேன். நீளக்கைச் சட்டை டை என்பன ஏற்கனவே இருந்த வெப்பத்தை மேலும் ஒரு படி கூட்டியது. வியர்வை ஆறாக ஓடத்தொடங்கியது.

இந்த மண்டபம் இலங்கையில் ஒரு பிரபலமான மண்டபமாகும். மறைந்த முன்னாள் பிரதமரும் சிங்களச்சட்டத்தின் தந்தையுமானவரின் ஞாபகார்த்தமாக சீனா அரசு அமைத்துக்கொடுத்தது. பிரமாண்டமான கட்டிடத்துள் பல்வேறு மாநாட்டு மண்டபங்கள் இருக்கின்றன.

அன்று பார்த்து மண்டப வாயிலில் சோதனை கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தன. என்னிடம் அடையாள அட்டையும் இல்லாததால் பயத்துடனே மண்டபத்தின் நுழைவாயிலினுள் நுழைய முற்பட்டேன்.

“மல்லி!!! IC கோ (தம்பி அ.அ எங்கே)??” முறைப்பாகக் கேட்டான் இராணுவச் சிப்பாய். அவன் கண்களில் கோபம் மிளிர்கிறது.

ஏதோ ஒரு அசட்டுத்துணிவில் புறப்பட்டேன். இப்போது எனக்கு செய்வது தெரியவில்லை... கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... விழிபிதுங்கத் தொடங்கினேன்.

(தொடரும்...)

10 November 2006

46 : ஓ.... சிக்கண் குணியா

ஆட்டக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியாக மயூரேசனையும் கடித்து விட்டது சிக்கன் குனியா!!!

மூன்று நாட்களாகக் கடும் காய்ச்சல். மூட்டுக்களெல்லாம் இன்னமும் வலிக்கின்றது. இதை எழுதுவதற்காக தட்டச்சிடும்போது விரல்கள் முடியாது முடியாது என்று மன்றாடுகின்றன. தலைக்குள்ளே ஏதோ பல லட்சம் இரயில் வண்டிகள் ஓடுகின்றன....

பட்டுப்பார்த்தாத்தான் தெரியும் என்று சொல்லுவார்கள்... நான் சிக்குன் குனியாவை அனுபவித்துவிட்டேன்... கடவுளே இப்படி உடம்பை முறிக்கின்றதே!!

இப்போ கொழும்பிலும் சிக்கன் குணியா பரவத் தொடங்கியுள்ளது. தமிழக அரசிடம் இவர்கள் ஆலோசனை கேட்பார்களோ??

6 November 2006

45 : யாருக்கு இலவசம் (சிறுகதை) - தேன்கூடு போட்டிக்காக

Photobucket - Video and Image Hostingவானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம்.

அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான்.

“டேய்! சின்னத்தம்பி.....! எங்கையடா நிக்கிறாய்?” தன் கடைக்குட்டியைச் சற்றே உரிமையோடு அதட்டிக் கூப்பிட்டாள்.

“ஓம் அம்மா! வாறேன்!!” பக்கத்துக் காணிக்குள் இருந்து சத்தம் வந்தது.

வரட்டும் இண்டைக்கு நல்ல முறி முறிச்சு விடுறன். எத்தின தரம் சொன்னாலும் இவன் தான் நினைச்சதத்தான் செய்யிறான் என மனதுக்குள் நெறுவிக்கொண்டாள் அன்புத்தாயார் கண்ணம்மா.

“இஞ்சருங்கோ இண்டைக்கும் இவன் மழையில நனைஞ்சு போட்டு வாறான். நீங்கள் தேப்பன் எண்டு இருக்கிறியள் அவனக் கொஞ்சம் கண்டிக்க மாட்டியளே?” விறாந்தையோரத்தில் கதிரையில் இருந்து வெத்திலை சப்பிக்கொண்டிருந்த தன் கணவனைக் கடிந்து கொண்டாள்.

“நீங்கள் மட்டும் அவனுக்கு அடிக்கிறியளே? சும்மா வாய் கிழியக் கத்திறது அவன் வந்து முன்னால நிண்டதும் முறிச்சுப் போடுவன் என்டு வெருட்டுறது. இதவிட்டா வேற என்ன செய்யிறியள். சும்மா என்னையும் அவனையும் ஏத்திவிடப் பார்க்காதையுங்கோ” தகப்பனார் தன் மகனுடன் கண்டிப்பாக இருக்க மாட்டேன் என்பதைத் தெளிவாகக் கூறினார்.

கண்ணம்மா சுந்தரேசன் தம்பதியர் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 10 மைல் தூரத்தில் உள்ள அந்த சிறியக் கிராமத்தில் வசிக்கின்றனர். ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பிறந்து ஏழு வருடங்களின் பின்னர் சின்னத்தம்பி பிறந்தான். இயல்பாகவே வீட்டில் செல்லம். அவன் செய்யும் அடாவடியை யாரும் தட்டிக் கேட்பதில்லை. பாவம் பிஞ்சு மழலை என்று தாயும் தந்தையும் கண்டிக்காமல் விட அன்பு அக்காவோ அதைவிட ஒரு படி மேல் சென்று தன் தம்பிமேல் அளவு கடந்த அன்பு காட்டுவாள். மொத்தத்தில் இந்த ஐந்து வயதுப் பாலகனுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை.

சின்னத்தம்பி இப்போ மழைச் சாரலில் நனைந்தபடி விட்டினுள் நுழைந்தான். வழமைபோல தாயார் தன் பாணியிலான வசைபாடிள் தகப்பனாரும் தன் பங்கிற்கு பொறுமையாக தன் பாணியில் சும்மா ஒப்புக்கு புத்திமதி கூறினார். சின்னத்தம்பிக்குத் தெரியும் அவ்வளவுதான் பின்னர் அனைத்தையும் இவர்கள் மறந்து விட்டு தன்னுடன் செல்லம் கொட்டுவார்கள் என்று.

“சரி போய் தலையை துடைச்சுக் கொண்டு வா! குசினிக்குள்ள தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கிறன் எடுத்துக் குடி”

“ஏன் அம்மா இண்டைக்கு சீனி போட்ட தேத்தண்ணியோ இல்லாட்டி இண்டைக்கும் சீனி இல்லையோ? சீனி இல்லாட்டி எனக்கு தேத்தண்ணி வேண்டாம்”.

“என்னப்பு நீ! உனக்குத் தெரியும்தானே இப்ப யாழ்ப்பாணத்திற்கு சாப்பாடுச் சாமான் ஒன்டும் வாறதில்லை எண்டு” பொறுமை இழக்காமல் கூறினார் சுந்தரேசன்.

“அப்பா அப்ப நாங்கள் கொழும்புக்குப் போவமே! அங்கையெண்டால் சீனி இருக்கும் தானே”

“ஓமடா தம்பி கொழும்பில சீனி இருக்கும் ஆனால் நிம்மதி இருக்காதுடா. செத்தாலும் இங்க இருந்து செத்தால் தூக்கிப்போடவாவது யாராவது வருவாங்கள்” மனவிரக்தி யாருடன் பேசுகின்றோம் என்பதைக் கூட யோசிக்காமல் அவரைப் பேச வைத்தது.

இதே வேளையில் பக்கத்தது வீட்டுக் கமலா வேலிக்குள்ளால் எட்டிப் பார்த்தாள்.

“கண்ணம்மா அக்கா! நேற்று கொழும்பில இருந்து வந்த கப்பலில கொஞ்சம் சாமான் வந்திருக்காம். இண்டைக்கு சங்கக்கடையில சாமான் குடுக்கிறாங்களாம். இப்பத்தான் எங்கட இவர் போய் சீனி எடுத்துக் கொண்டு வந்தவர். 3 கிலோ சீனி குடுத்து இருக்கிறாங்கள் அக்கா. சனம் நிரம்ப முதல் போய் லைனில இடத்தப் பிடியுங்கோ” சட சடவெனக் கூறிவிட்டு மழையில் தன் தலை நனையாதிருக்க கைகளை தலைக்கு மேலே பிடித்தவாறு வீட்டினுள் ஓடினாள் கமலா.

கணவனுக்கோ கடும் காய்ச்சல் இன்று வேலைக்கும் போகவில்லை. மழையில் எப்படி அவரை நனைந்து கொண்டு போகச் சொல்லுவது. அவளிற்கு இப்போ தெரிந்தது கண்முன்னே நின்ற சின்னத் தம்பிதான்.

“டேய் சின்னத்தம்பி! ஓடிப்போய் சங்கக்கடைக்கு முன்னால நிக்கிற லைனில இடத்தைப் பிடி நான் வந்ததும் நீ வீட்ட திரும்பலாம். அம்மா சாறியக் கட்டிக் கொண்டு கெதியாவாறன்”

சின்னத் தம்பிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானது. இப்போது ஆசைக்கு மழையில் நனையலாம்.

“பீப் பீப் பீப்....” தான் ஏதோ கார் ஓடுவது போன்று பாவனை செய்து கொண்டே சாட்டுக்குக் குடையையும் பிடித்துக் கொண்டு சந்தியில் இருக்கும் சங்கக் கடையை நோக்கி ஓடத் தொடங்கினான் சின்னத்தம்பி.

ஐந்து நிமிடங்களில் அவன் கடைவாயிலில் நின்றிருந்தான். வரிசை அவ்வளவு நீளமாக இல்லை. உணவுப் பஞ்சம் மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் தலைவிரித்து ஆடத் தொங்கிவிட்டதை நினைவு படுத்தும் முகமாக சங்கக் கடை வாசலில் மக்கள் மெல்ல மெல்ல வந்து நிறையத் தொடங்கினர். மூன்று கிலோ சீனிக்கு மூன்று மணிநேரம் காத்திருக்கவும் இவர்கள் இப்போது தயாராக இருந்தார்கள்.

அடுத்த சில நிமிடத் துளிகளில் சின்னத்தம்பியின் அன்புத்தாயார் கண்ணம்மாவும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.

“சின்னத்தம்பி.. நல்ல காலம் நீ வந்து இடம் பிடிச்சாய்! இல்லாட்டி இப்ப நானும் லைனில பின்னாலதான் நிண்டிருக்கோணும்” பரிவுடன் கூறினாள் தாயார். வாய் நிறையச் சிரிப்புடன் தாயாரின் பாராட்டை ஏற்றுக்கொண்டான் அந்தப் பாலகன்.

அடுத்து சில நிமிங்களில் இவர்களுக்கான மூன்று கிலோ சீனி இலவசமாகக் கிடைத்துவிட்டிருந்தது. கண்ணம்மா அதை கவனமாக இரு கைகளாலும் ஏந்தியபடி கடையை விட்டு இறங்கினாள்.

கடவுளே இத்தனை நாட்களிற்குப் பின்னர் இன்றுதான் மீண்டும் சீனித் தேத்தண்ணி குடிக்கப் போறம்... மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

“அம்மா! பையை என்னட்ட தானே! நான் கொண்டு வாறன்”

“சும்மா இருடா உன்னோட பெரும் கரைச்சல்” நோகாமல் கடிந்து கொண்டாள் கண்ணம்மா.

“அம்மா! நான் கவனமாக் கொண்டருவன்... தாங்கோ!!!”

இரட்டை மனத்துடன் கண்ணம்மா தன் மகனிடம் பையைக் கொடுத்தாள். பையை வேண்டியதுதான் தாமதம் மீண்டும் பீப் பீப் எனச் சத்தம் இட்டவாறு ஓடத்தொடங்கினான் சின்னத்தம்பி.

“டேய்.. டேய்.. பார்த்துடா! பை கிழிஞ்சு போகப்போகுது.....”

அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பை கிழிந்து சீனி அவ்வளவும் காலை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அருகாமையில் விழுந்து விட்டது.

இரண்டடி முன்னே சென்ற கண்ணம்மா பளீர் எனச் சின்னத்தம்பியின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். பாலகனோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாங்காமல் ஒரு வினாடி சிலையாய் நின்றிருந்தான். மறு கணம் கண்ணீர் மல்க வீடு நோக்கிக் கட கடவென நடக்கத் தொடங்கினான்.

“போ போ வீட்ட வைச்சு உனக்கு நல்ல முறி தாறன்” சீனித் தேத்தண்ணி கனவு கலைந்த கோபத்துடன் கூறிய கண்ணம்மா சின்னத்தம்பியின் பின்னால் நடக்கத் தொடங்கினாள். சற்றே நடந்தவள் மனம் கேட்காமல் சீனி கொட்டுப்பட்ட இடத்தை திரும்பிப் பார்த்தாள்.

மழை வெள்ளத்திற்கு அப்பால் இருந்த குடிசை வீட்டில் இருந்த ஒரு சின்னப் பெண் எப்பிடியும் சின்னத் தம்பியிலும் இரண்டு வயசு அதிகமாக இருக்கலாம், மட மட என கொட்டுப் பட்ட சீனியை தன் கிழிந்த பாவாடைத் துணியில் போட்டுக் கொண்டு இருந்தாள். மழை வெள்ளம் நன்கு ஊற முதல் சீனியை அள்ளிவிட வேண்டும் என்பதில் அவள் குறியாக இருந்தாள். அவள் வாடிய முகம் சாப்பிட்டு சில நாட்களாவது இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.

இப்போது கண்ணம்மாவின் கண்களில் இருந்து சில சொட்டுக் கண்ணீர்த் துளிகள் வழிந்தோடி வந்து அந்த இரத்தம் தோய்ந்த வரலாறு கொண்ட மண்ணில் விழுந்தது. அவள் வலிமைக்கு முடிந்தது சில கண்ணீர் துளிகளை அந்த அபலைச் சிறுமிக்காகச் சிந்துவதுதான்.

பி.கு (தமிழக உறவுகளுக்காக) : சீனி எனப்படுவது தமிழகத்தில் சர்க்கரை என நீங்கள் அறிந்த பண்டத்தையே!

5 November 2006

44 : உதாரண ஆர்கூட் ஸ்கராப்புகள் (Orkut Scraps)

birthday scraps
*. * . * . * . * . * . * . * . * . * . * . * . *
*. * . * . * . * . * .OIE!!! * . * . * . * . *
*. * .*_/\_ *. * . * . * . * . * . * . * . * .*
. *. * >,"< * MANY MANY MANY * . * . * , + .*... * . * . * . * . * . * . * . * . * . * * . * . * . * _/\_. * . HAPPY RETURNS * . * * . * . * . * >,"< . * . * . * . * . * . *. * . * + * . *. * . * . * . * . * . OF THE day* . * . _/\_ * . * . * * . * . * . * .

just 4 my SWEET FRIEND HAppy BIrthDay
*.* .* .* .* .* .() ().() () () () () .* .* .*.* .* .
.* .* .* .*.* .* . .* .* .*.* .*
.* .* .* .* . *@@@@@@@@@@ .* .* .*.* .*
.* .* .* .* .*@/////////////////////@ .* .* .*.* .*
.* .* .* . *@@@@@@@@@@@@@ .* .* .*.* .*
.* .* .* .* @//////////////////////////@ .* .* .*.* .*
.* .* .* @@@@@@@@@@@@@@@@ .* .* .*.* .*
.* .* .* @/////////////////////////////////@ .* .* .*.* .*
.* .* .* @@@@@@@@@@@@@@@@ .* .* .*.* .*
.* .* .*.* .* .* .* .*.* .* .* .* .*.* .* .* .* .*.* .*


SUN IS SHINING...paste the code in orkut

[aqua]██[gold]█[aqua]████████[gold]█[aqua]████████[gold]█
[aqua]███[gold]█[aqua]███████[gold]█[aqua]███████[gold]█
[aqua]████[gold]█[aqua]████[gold]█████[aqua]████[gold]█
[aqua]█████[gold]█[aqua]█[gold]█████████[aqua]█[gold]█
[aqua]██████[gold]███████████
[aqua]█████[gold]█████████████
[aqua]█████[gold]███[aqua]█[teal]█[gold]███[aqua]█[teal]█[gold]████
[aqua]████[gold]████[aqua]█[teal]█[gold]███[aqua]█[teal]█[gold]████
[gold]███████████████████████
[aqua]████[gold]███████████████
[aqua]█████[gold]███[red]█[gold]█████[red]█[gold]███
[aqua]█████[gold]████[red]█[gold]███[red]█[gold]████
[aqua]██████[gold]████[red]███[gold]████
[aqua]█████[gold]█[aqua]█[gold]█████████[aqua]█[gold]█
[aqua]████[gold]█[aqua]████[gold]█████[aqua]████[gold]█
[aqua]███[gold]█[aqua]███████[gold]█[aqua]███████[gold]█
[aqua]██[gold]█[aqua]████████[gold]█[aqua]████████[gold]█

CRAZY MONLEY - paste the code in scrapbook
[green]█████████[gray]███[green]█████
[aqua]██████████[gray]██
[aqua]██████████[gray]██
[aqua]██████████[gray]██
[aqua]█[gray]██[aqua]███████[gray]██
[gray]████[aqua]█████[gray]███
[gray]█████[aqua]██[gray]█████
[aqua]███[gray]██████████
[aqua]███[gray]██████████
[aqua]█████[gray]█████████
[gray]████[gray]██████████
[gray]███[aqua]█[gray]██████[silver]█[gray]██████
[aqua]█[gray]█[aqua]████[aqua]█[gray]███[silver]████[gray]███[gray]█
[aqua]███████[gray]██[silver]███████[gray]██
[aqua]███████[gray]███[silver]█[maroon]█[silver]█████[silver]██
[aqua]███████[gray]███[silver]████[maroon]█[silver]██[silver]██
[aqua]███████[gray]████[silver]█[gray]█[silver]███[silver]██
[aqua]██████[gray]████[aqua]█[silver]██████[gray]██
[aqua]██████[gray]███[aqua]██[silver]███[aqua]███[gray]██
[aqua]██████[gray]██[aqua]█████████[gray]██
[aqua]██████[gray]███[aqua]████[gray]█[aqua]█[gray]██
[aqua]██████[gray]██[aqua]█████[gray]███


SMALL COLOURFULL FISH-PASTE CODE IN ORKUT SCRAPBOOK

[aqua]█████[gold]██[red]████
[aqua]████[gold]███[yellow]█[gold]██[red]██
[aqua]███[gold]█[yellow]████[gold]█[yellow]█[gold]█[aqua]█[red]██
[aqua]██[gold]█[yellow]███████[gold]██[aqua]████[gold]█[red]██
[aqua]█[yellow]██[yellow]███████[gold]███[aqua]█[gold]█████[red]██
[aqua]█[yellow]██[gray]█[yellow]████████[gold]█[aqua]█[gold]██████[red]█
[aqua]█[yellow]██[gray]█[yellow]█████████[gold]███████[red]█
[yellow]████████████[gold]███[red]██[aqua]█[gold]██
[yellow]█████[gold]███[yellow]████[gold]██████[red]██
[aqua]█[yellow]█████[gold]██[yellow]███[gold]██[aqua]██[gold]████[red]█
[aqua]██[yellow]█████[gold]██[yellow]██[gold]█[aqua]███[gold]█[red]█[gold]█[red]██
[aqua]████[gold]█[red]█[gold]█[yellow]█[gold]██[aqua]█████[red]█[gold]██[red]██
[aqua]██████[red]████[aqua]████[red]██████
[aqua]████████[red]███[aqua]████[red]███
[aqua]██████████[red]███

BLUE WHALE - paste the whole code in orkut scrap
[aqua]███████████[blue]██████
[aqua]█████████[blue]█████████
[aqua]███████[blue]██████[aqua]█[blue]█████
[aqua]██████[blue]██████████████████
[aqua]████[blue]███████████████████
[aqua]███[blue]████████████
[aqua]██[blue]███████████
[aqua]█[blue]███████████
[blue]██████████████
[blue]███████████[aqua]██[blue]██
[blue]██████████[aqua]████[blue]█
[blue]█[aqua]█[blue]████████
[blue]█[aqua]██[blue]██████
[blue]█[aqua]██[blue]██████
[aqua]████[blue]█████
[aqua]█████[blue]█████
[aqua]██████[blue]████
[aqua]███████[blue]███
[aqua]████████[blue]███
[aqua]████████[blue]████
[aqua]███████[blue]███████
[aqua]██████[blue]█████████
[aqua]██████[blue]██████████
[aqua]█████[blue]█████[aqua]█████[blue]█
[aqua]█████[blue]███
[aqua]█████[blue]██
[aqua]██████[blue]█[/blue][/aqua][/b]


மேலும் பல

3 November 2006

43 : யார் இந்த நட்சத்திரம் அல்லது போத்தல் திறப்பான்






என்ன தெரிய வில்லையா பாருங்கள்!!!


அட ஆமாங்க பிரேசிலின் கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டிங்கோ!!!!


டெக்னாரடி டக்ஸ்
,,

2 November 2006

42 : பாத்திரம் கழுவ புதிய உத்தி



வீடுகளில் சமையலிற்குப் பின்னர் பாத்திரம் கழுவுவது என்றால் பெரும் தலையிடி. குறிப்பாகப் பெண்கள் பாத்திரம் கழுவும் போது ரெம்பவுமே எரிஞ்சு விழுவாங்க.

ஏதோ இந்த உலகம் முழுவதும் சமைச்சவங்களோட பாத்திரத்தை தான் கழுவுறமாதிரி பில்ட் அப் கொடுப்பார்கள். இதில் இருந்து விடுபட ஒரு சிக்கனமான பாதை ஒன்றை கீழே காட்டியுள்ளேன் பாருங்களேன்...

ஐயோ... என்ன நசலப்பா இது!! என்று நீங்கள் அலறும் சத்தம் என் காதுகளுக்கு கேட்கின்றது. ;-)

டெக்னாரடி டக்ஸ்


31 October 2006

41 : அடம் பிடிக்கும் தமிழ்மணம்

எனது மற்றய வலைப்பதிவான ஹாலிவூட் பார்வை மற்றும் இந்த வலைப்பதிவான தமிழ் வலைப்பதிவில் இருந்து பதிவை தமிழ்மணம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. உதவிகோரி வந்துள்ளேன்!!! கீழ் கண்ட பிழைச் செய்தி வருகின்றது.

Cannot query database. Have you run install.php? MySQL says: Duplicate entry '2147483647' for key 1

என்ன பிழையாக இருக்கும் என்று யாராவது சொல்லி அருள்வீர்களா!

தேன்கூடு எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டது. தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள். அட்டைப்பலகையில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை ஏனெனில் புது அட்டைப்பலகை போட்டும் பிரைச்சனை தீரவில்லை.



உதவி உதவி உதவி!!!!!!!

30 October 2006

40 : சிம்சன் தொலைக்காட்சித் தொடரின் காட்சிகளைப் பதிவிறக்க


உலகப்புகழ் பெற்றது சிம்சன் கார்டூன்கள். இது சிறுவர்கள் பார்க்கக் கூடியதாக இருப்பினும் பெரியோருக்காகத் தயாரிக்கப்பட்டதே.

இந்த பக்கத்தில் சிம்சன் கார்டூன் ஆரம்பக்காலத்தில் எடுக்கப்பட்ட சில கிளிப்புகளைத் தருகின்றது.

பதிவிறக்கிச் சிரித்து மகிழ

டெக்னாரடி பகுப்புகள்


27 October 2006

39 : சுவிட்சர்லாந்தின் கழிவறை

வெளிப்புறம்


உட்புறம் சென்றபிறகு

என்ன பார்த்தபின்பு இதற்காகவாவது சுவிற்சர்லாந்து போகலாம் போல இருக்குதா???

38 : நாசா (NASA) போகலாம் வாங்க

வாழ்க்கையில் ஒரு தடவையாவது நாசாவைப் பார்த்துவிடத் துடிப்பவரா நீங்கள்..

அப்போ வாருங்கள் பாருங்கள். என்ன தொட்டு உணர முடியாவிட்டாலும் பார்த்து உணருங்கள்..









24 October 2006

36 : Engineer இல்லாத உலகம்

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பொறியியளாளர்கள் இல்லாவிட்டால் இந்த உலகு எப்படி இருந்திருக்கும் என்று கீறியுள்ளார்கள். இது சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும்தான்!!!






















20 October 2006

35 : வெர்ச்சுவல் (Virtual) தீபாவளி பட்டாசு



எங்கள் எல்லாருக்கும் தீபாவளி அன்று பட்டாசு கொளுத்த விருப்பம்தான் ஆனால் சிறு வயதில் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தா??

இல்லை.. இக்குறையைத் தீர்க்க இதோ வந்திருக்கின்றது வேர்ச்சுவல் பட்டாசு கொழுத்தி மகிழுங்கள்...

சுட்டிக் கொழுத்து

34 : இலங்கை இலவசக் கல்வியின் தந்தை


இதை நான் எழுதக்காரணம் இன்று இலங்கையின் கல்வியறிவு இத்தனை பிரைச்சனைக்கு மத்தியிலும் 90 விழுக்காடாக இருப்பதற்கு இவர் செய்த தூரநோக்கான முயற்சியே காரணமாகும். இன்று பாடசாலைமுதல் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி வழங்கப்படுகின்றது.

இலங்கையின் இலவசக் கல்வியைப் பற்றிப் பார்க்க முன்னர் இலவசக் கல்வியின் தந்தையைப் பற்றி ஒரு சிறு குறிப்பைப் பார்ப்போம்.

கிறிஸ்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கரா இலங்கையின் கல்வித்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்றார். இவரே இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தார். இவர் அக்டோபர் 14, 1884 ல் பிறந்தார். இவர் அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்பு காலி றிச்மன்ட் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்னர் இவர் ஆசிரியராக மொரட்டுவை பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். சட்டத்துறையில் தகுதிபெற்ற இவர் பின்பு காலியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். 1919 ல் அரசியலில் நுழைந்து கொண்டார். செப்டெம்பர் 29, 1969 ல் இறைவனடி சோர்ந்தார்.

இலவச கல்விக்கு எதிர்ப்பு கருத்துகளும் கொழும்பைத் தளமாக கொண்டு எழுந்துள்ளதைக் கூறலாம். இது குறிப்பாக படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இருந்தே ஏற்பட்டுள்ளது. இதன் விழைவாக கடந்து போன அரசு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அமைக்கப்போய் பின்பு அது பெரிய அரசியல் விடயதானமாகி பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஒருவர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதற்காக செலவிடும் பணத்தை இலங்கையிலேயே செலவிட்டால் இலங்கையின் வெளிநாட்டு நாணயம் சேமிக்கப்படும் என்பதே முன்னய அரசின் வாதம். ஆயினும் பின்னர் தனியார் கல்லூரிகள் அரச பல்கலைக்கழகங்களை விட வினைத்திறனாக தொழிற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நம்மைப்போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் கடும் வெயிலிலும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஏற்கனவே தனியார் பாடசாலைகள் இலங்கையில் வினைத்திறனுடன் இயங்க ஆரம்பித்து விட்டமையையும் இங்கு கூறவேண்டும். எனக்கு தனியார் கல்விக் கூடங்களை அமைப்பதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லாதபோதும் ஊருடன் ஒத்து வாழ் என்பதற்காக ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றேன்.

இங்கே இத்தனைக்கும் மத்தியில் சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை தாம் கற்பிக்கின்றன. இவை தம்மை நிறுவனங்களாக காட்டிக்கொள்வதுடன் கல்லூரிகளாகக் காட்டிக்கொள்வதில்லை. இதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றது. இவர்கள் செய்வதெல்லாம் இங்கே முதலாம் வருடத்தை முடியுங்கள் பின்பு பெங்களூர், அமேரிக்கா, லண்டன் என நீங்கள் விரும்பும் பல்கலைக் கழகத்தில் மிகுதியைத் தொடருங்கள். வெறும் 5 விழுக்காடு மாணவர்களே பல்கலைக்கழகத் தகுதி பெறும் போது மிகுதி மாணவர்களுக்கு இதைவிட வேறு வழி என்ன?. இந்த முறை இப்போது இலங்கையில் மிக வேகமாக பிரபலமாகிக்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு என்ன செய்வார்கள்?? இதைவிட தனியார் கல்லூரிகளை அனுமதிக்கலாம் தானே?

இந்தியா, சிங்கப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றிய ஆற்றும் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை இலங்கை அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தனியே அரச கல்வி நிறுவனங்கள்தான் இயங்கவேண்டும் என்று இருந்திருந்தால் சிங்கப்பூர் போன்ற நாடுகள் கல்வியில் இன்று இருப்பதைப்போல சர்வதேச தரத்திலான பாடநெறிகளை வழங்கிஇருக்க முடியாதுதானே?

எது எதுவாயினும் தூரநோக்கற்ற இலங்கை அரசியல்வாதிகளிடையே கன்னங்கரா போன்ற ஒருவர் கிடைத்தமை இலங்கையரின் அதிட்டமே!

16 October 2006

33 : ஈழத் தமிழருக்கு என்ன போர் வெறியா???

இலங்கையில் இன்றய நிலமை தற்போது தமிழகத்தில் பெரும் குளப்பத்தை தூண்டி விட்டு இருக்கின்றது. இது உணர்வுகளுடன் தொடர்பு பட்ட விடயம் என்பதால் தமிழகக் கட்சிகள் யாவும் இதன் மூலம் குளிர்காய முயற்சிக்கின்றன. சிலர் ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சிலர் தற்போது திடீர் என்று ஈழத்தமிழர் பால் அன்பு செலுத்துவது சந்தோஷத்திற்குப் பதிலாக வேதனையைத் தருகின்றது. காரணம் தற்போதய நிலமை சிறிது தணிந்ததும் அவர்கள் ஈழத் தமிழர்களை மீண்டும் மறந்து விடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது.

இந்தக் கட்டுரை தமிழகத் தமிழர்களுக்காகவே எழுதுகின்றேன். ஈழத் தமிழர்களின் பிரைச்சனை பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையை இக்கட்டுரை அவர்களுக்கு வழங்கும் என்று நம்புகின்றேன்.

ஈழப்பிரைச்சனையின் ஆணி வேர் 1948 ல் தொடங்குகின்றது. 1948 ல் இலங்கை பிருத்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இதன்போது இலங்கையில் இருந்த அப்போதய தமிழ் தலைவர்கள் தாம் சிங்களவருடன் இணைந்து வாழமுடியும் என்று நம்பிக்கை கொண்டு இருந்ததால் தமக்கு இணைந்த நாட்டையே வழங்குமாறு இங்கிலாந்து அரசிடம் கேட்டுக் கொண்டனர். அவ்வாறே இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

அன்று ஈழத் தமிழ் தலைவர்கள் அவ்வாறு கேட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. எ-கா. கொழும்பில் தமிழர்களே உயர் பதவிகளை வகித்தனர். நாடு முழுவதும் கிட்டத்தட்ட தமிழர்களே உயர் பதவிகளில் இருந்தனர். நாட்டின் உயர் கல்விப் பீடங்களில் தமிழ் மாணவர்களே மிக உச்ச அளவில் இருந்தனர். ஆகவே அவர்கள் நாட்டை பிரிக்கும் தேவை இருந்ததாக உணரவில்லை.

சிங்களவர் மனதில் சாதுவான நெருடல் பழைய காலம் முதலே இருந்து வந்தது. காரணம் தமிழர்களே அனைத்து துறையிலும் கோலோச்சுகின்றார்கள் என்று. ஆயினும் இதற்கான காரணம் பிருத்தானியரின் பாடசாலைகள் போன்ற கல்வீத்தாபனங்களை யாழ்ப்பாணத்திலே அமைத்தனர். இதன் காரணமாகவே தமிழர்கள் உயர் பதவிகளை அடையக் கூடியதாக இருந்தது.

ஆயினும் சுதந்திரத்தின் பின்னர் நிலமை தலைகீழாக மாறத் தொடங்கியது அதன் முதல் படிதான் தனிச் சிங்களச் சட்டம். இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறை வேற்றிய புண்ணியவான் முன்நாள் இலங்கைப் பிரதமரும் சந்திரிக்காவின் தந்தையுமாகிய எஸ்.டபிள்யு.பண்டாரநாயக அவர்கள். 1958 ல் இவர் இந்த சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். அங்கு அவரிற்கு வரவேண்டிய பதவி வராமல் விடவே விரக்தியில் சில இடது சாரிக்கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு சுதந்திரக்கட்சியை அமைத்தார்.

இலகுவாக ஆட்சியைப்பிடிக்க அவரிற்குத் தெரிந்த ஒரே வழி சிங்களவரின் உணர்வுகளைத் தட்டிவிடுவதே. அதனால் தனது தேர்தல் விஞ்ஞாபத்தில தான் ஆட்சிக்கு வந்தால் 48 மணி நேரத்தில் சிங்களத்தை தனி ஆட்சி மொழிஆக்குவேன் என்று உறுதி அளித்தார். ஏற்கனவே தமிழர் மீது சாதுவான பொறாமை கொண்டிருந்த சிங்களவர் தம் வாக்குகளை பண்டாரநாயக்கவிற்கு வழங்கி ஒரு பெரும் வரலாற்றுத் தவறை நிகழ்த்தினர். இத்தனையும் செய்த பண்டார நாயகாவை ஒரு பெளத்த பிக்கு துப்பாக்கியால் சுட்டமையையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டாரநாயக்காவும் அதை அவ்வாறே நிறைவேற்றிக்காட்டினார். அன்று முதல் இன்று வரை தமிழர்கள் இலங்கை நடுவண் அரசினால் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து தமிழ்கட்சிகள் காலி முகத்திடலில் பெரும் சத்தியாகிரகத்தை ஏற்பாடு செய்தனர். காத்தியத்தை பின்பற்றி போராடியவர்களை அன்று இலங்கை அரசு குண்டர்களைக் கொண்டு அடக்கியது. சத்தியாக்கிரகம் செய்தவர்களை பொலீசாரின் பாதுகாப்புடன் குண்டர் குழுக்கள் தாக்கினர். இவ்வாறு பல தடவைகள் தமிழரின் அஹிம்சா போராட்டம் மோசமாக நசுக்கப்பட்டது.

1960 ல் பண்டாரநாயக்காவின் துணைவியார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிநாலும் அவரும் கணவரின் பாதையைப் பின்தொடர்ந்தார். இவரின் காலத்தில் சிங்கள மொழிச்சட்டம் கடுமையாக்கப் பட்டதுடன் அரச சேவையில் இருந்து பல தமிழர்கள் சிங்களம் தெரியாத காரணத்தால் வெளியேற்றப்பட்டனர்.

1965 ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. அத்துடன் தமிழிற்கு சட்டத்தில் ஒரளவு அங்கீகாரம் வழங்கப்பட்டது. பின்பு 1970 களில் தமிழிற்கு அந்தஸ்து வழங்கப்பட்டதையும் ஐ.தே.க திறந்த பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்து பிரச்சாரம் செய்த சுதந்திரக்கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.

1971 ஏப்ரலில்தான் இன்றய இனவாதக் கட்சியான JVP உருவானது. இது வொரு தீவிரவாதக் குழுவாக ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் எந்த அடிப்படைக் கொள்கைகளும் இல்லாத இவர்கள் அன்றய அரசினால் நசுக்கி ஒடுக்கப்பட்டனர்.

1972 ஸ்ரீமா பண்டாரநாயக தலமையிலான அரசு புதிய அரசியல் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் சிலோன் என அறியப்பட்ட நாடு ஸ்ரீ லங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் காணப்பட்ட சரத்துகளால் தமிழினதும் சிறுபாண்மை மக்களான முஸ்லீம்களினதும் உரிமைகள் பறிக்கப்பட்டன. அதாவது பெளத்த மதம் நாட்டின் முதன்மை மதம் என்றும் இலங்கை பெளத்த நாடு என்றும் அது கூறியது. இக்காலப் பகுதியிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பு ஈழத்தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

1977 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வந்ததுடன் ஜயவர்த்தனா பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார் (ஐ.தே.க). பாராளுமன்றத்தில் தமிழீழ மாநிலத்தை வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒரு தமிழ் கட்சி பாராளுமன்றத்தில் இரண்டாவது அதிக ஆசனங்களைப் பெறுவதைப் பொறுக்க முடியாது ஜயவர்த்தனா 1978 ல் புதிய அரசியல் யாப்பு திருத்தத்தை மேற்கொண்டார். இப்புதிய யாப்பு மூலம் அரச அதிபர் நாட்டின் அதியுயர் சக்தி பீடமாகவும் மாற்றப்பட்டது.

இவ்வேளையில் ஒரு சட்டத்தின் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் தமிழ் மாணவர்கள் ஒரம் கட்டப்பட்டு. குறைந்த வெட்டுப்புள்ளியுடன் சிங்களமாணவர்கள் தெரிவாக வழிசமைத்தனர். தமிழரின் சொத்தாம் கல்வியும் கடைசியாகப் பறிக்கப்பட்டது. இது இள இரத்தங்களை தூண்டி விட்ட முழு முதற் காரணி.

1982 காலப்பகுதியில் இளைய இரத்தங்கள் மெல்ல மெல்ல வன்முறை நோக்கித் திரும்பத் தொடங்கியது. இக்காலத்திலே புலிகள் உட்பட பல கொரில்லா குழுக்கள் தோற்றம் பெறத் தொடங்கின. இவர்களிற்கு ஆதரவு தமிழகத்திலிருந்து இந்திய அரசின் ஆதரவுடன் கிடைத்தது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புலிகள் தம்மை தனி முத்திரையிட்டு மற்றவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டியதும் இக்காலப்பகுதிதான்.

இதற்குப் பின்னர் பல தடவைகள் ஈழத்தமிழர் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதன் உச்சக்கட்டம்தான் 1983 கலவரம். இதன் பின்னரே உதவி கோரி தமிழகம் செல் ஈழத்தமிழர்கள் தலைப்பட்டனர். இதன் போது சிங்களக் காடையர் தமிழர்களின் இருப்பை இலங்கையில் கேள்விக் குறியாக்கினர். தலைநகரத்தில் தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொலை செய்யப்பட்டனர். இவை அனைத்தையும் இலங்கை அரசு சும்மா கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.

இதன் பின்னர் நடந்தவை யெல்லாம் நீங்கள் அறிந்தவையே! அவையெல்லாம் ஈழத்தமிழரிற்கும் இந்தியாவிற்கும கசப்பான நிகழ்வுகள். தனியே புலிகள் மட்டும் குற்றம் செய்தவர்கள் என்று கூறி முடிப்பதற்கில்லை. பாரத மாதாவின் படைகள் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் செய்தது என்ன என்பதையும் ஒப்பு நோக்குதல் வேண்டும்.

இனிமேல் சிங்களக் காடையர் தமிழர் மீது கைவைக்க மாட்டார். காரணம் நான் சொல்லத் தேவையில்லை. வெட்டுக்கு வெட்டு என்னும் நம்மவர் கொள்கை இனி இலங்கையில் ஒரு இனக்கலவரம் உருவாவதற்கான கள நிலமையை அகற்றிவிட்டது. ஆயினும் சிங்களப்படைகளை அது அவ்வளவு இலகுவாகக் கட்டுப்படுத்திவிடாது. அது சிங்களக் காடயரை மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது.

நான் இங்கு கோடிட்டு காட்டியது சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இது போல பல நிகழ்வுகள் இங்கு நடந்தேறிவிட்டன. இனியாவது புதிய யுகம் இந்த மக்களிற்குப் பிறக்குமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

11 October 2006

32 : உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள்.

உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள். வழமை போல அமெரிக்காவின் ஹாவாட் பல்கலைக்கழகம் முதல் இடத்தில் உள்ளது இரண்டாம் மூண்றாம் இடங்களில் முறையே கேம்பிரிச், ஒக்ஸ்போட் உள்ளன. இதைவிட மூன்று இந்தியப் பல்கலைக்கழகங்களும் முதல் 200 இடத்தினுள் உள்ளன.

கீழே கிளிக் செய்து பாருங்கள். சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகமும் தெரிவாகியுள்ளது. வழமைபோல இலங்கையில் இருந்து ஒரு பல்கலைக்கழகமும் தெரிவாகவில்லை.


இந்தியா
1. Indian Institute of Technology
2. Indian Institute of Management
3. Jawaharlal Nehru University

சிங்கப்பூர்
1. National University of Singapore
2. Nanyang Technological University


அனைத்தையும் காண......

7 October 2006

31 : இளைஞர்களின் சுப்ரபாதம்


இன்றய இளைஞர்கள் சமய விடயங்களில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குறிப்பாக கோவில் செல்வதில்லை, சென்றால் அதன் பின் பல காரணங்கள் இருக்கும். இப்படிப் பட்டியல் மோசமாக நீளுகின்றது.

இந்த நிலையில் இருந்து மீள என்ன செய்யலாம் அவர்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.

இங்கே நான் ஒரு எம்.பி3 கோப்பை இணைத்துள்ளேன். அதைப் பதிவிற்க்கிக் கேட்டுப்பாருங்கள். சத்தியமாக அடித்துச் சொல்கின்றேன் அது சுப்பிரபாதம்தான்.

இப்போதெல்லாம் காலையில் இந்த சுப்பிரபாதத்தைக் கேட்காமல் பல்கலைக்கழகம் போவதேயில்லை. அப்பிடி என்ன விஷேஷம் இதில் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது பதிவிறக்கித்தான் பாருங்களேன். இதைச் செய்த புண்ணியவான் யாரோ தெரியவில்லை.....

உங்கள் காலையும் இந்த சுப்பரபாதத்துடன் அருமையாக அமைய வாழ்த்துக்கள்....

பதிவிறக்க...

6 October 2006

30 : எனக்கு எப்போ விடுதலை - தேன் கூடு போட்டிக்காக.


யன்னலைத் திறந்தாள் விமலா. எதிரே கடற்கரை பரந்து கிடந்தது. கடற்கரை உப்புக் காற்று ஏற்கனவே கலைந்திருந்த அவள் கேசத்தை மேலும் கலைத்தது. திடீரென காற்று கொஞ்சம் வேகமாக வீசவே அது உப்பு மணத்துடன் சிறுது மணலையும் அள்ளிவந்து அவள் முகத்தில் தூற்றியது. சினப்பதற்குப் பதிலாக அவள் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை. தன் விரல்களால் நிதானமாக மண்ணைத் தட்டிவிட்டாள்.

பின்னே திரும்பிப் பார்த்தாள் அவளது மாமியார் சுயநினைவற்று படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவள் ஆதரவற்று நின்றபோது ஆதரவு தந்த உள்ளம் இது.

“அம்மாவும் எனக்கு மண்ணள்ளி வீசி தூற்றினவதானே... இப்ப இந்த கடற்காற்றும் மண்ணை வாரி இறைச்சுத் தூற்றுது”. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே அவள் கடகடவென வெளியே செல்கின்றாள். விறாந்தையில் நாகலிங்கம் அண்ணே நின்றுகொண்டு இருந்தார்.

“வாங்கோ அண்ணே!”

நாகலிங்கம் நல்ல கறுப்பு நிறம். சாரம் அணிந்து கையில் மீனுடன் அஜானபாகுவாக வெறும் மேலுடன் நின்றிருந்தான். முதற் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவர் அவன் கடலில் சென்று மீன் வேட்டையாடும் வேட்டைக்காரன் என்று. விமலாவிற்கும் யாழ்ப்பாணத்தின் வட கரையிலுள்ள இந்த மீனவ சமூகத்திற்கும் ஒரு பந்தம் ஏற்பட்டு இருந்தது.

“பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது”. கையில் இருந்த இரண்டு விள மீன்களை நீட்டினான். விமலாவும் வாங்கிக்கொண்டாள்.

“சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு” அவர் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படரத்தொடங்கியது.

“அப்ப நான் வாறன்”

“சரி அண்ணே”

விமலா மீனை எடுத்துக் கொண்டு குசுனிக்குள் போனாள். அவள் மீனை எடுத்து ஒரு மண்சட்டிக்குள் போட்டாள். என்னொரு சட்டிக்குள் சிறிது நீர் எடுத்து அதனுள் இந்த மீனை இட்டு நன்கு கழுவிக் கொண்டாள். அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தன் முன்னாள் வைத்தாள். லாவகமாக பெரிய கத்தி ஒன்றை விரல்களுக்கிடையில் செருகிவிட்டு நறுக் நறுக் என்று மீனை வெட்டத் தொடங்கினாள். நன்கு பழகிய கை தொடர்ந்து மீன்னை வெட்டிக்கொண்டு இருந்தது. இடைக்கிடை நெற்றியில் விழும் கூந்தலை தன் பிறங்கையால் மேவிக்கொண்டாள். இப்போ அவள் நினைவுள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகரத்தொடங்கியது.

“அடியே வெக்கம் கெட்ட நாயே.. உனக்குப் போயும் போயும் அந்த மீன்பிடிக்கிறவனா கிடைச்சான்??” மங்களம் வெறி பிடித்தவள் போல சத்தம் இட்டுக் கொண்டு இருந்தாள்.

பாவம் மங்களம் தன் மகளின் எதிர்காலம் பற்றி பல கற்பனைக் கோட்டைகள் கட்டிக்கொண்டு இருந்தவளிற்கு அவளின் மகளின் நடத்தை அப்படிக் கோவத்தைத் தூண்டி விட்டுடிருந்தது.

“முன் வீட்டு சுந்தரம் எத்தன தரம் உன்னப் பற்றி சொல்லேக்க நான் நம்பேல.. என்ற மேள் இப்படியெல்லாம் செய்யாள் எண்டு அவனுக்கு விடுக்கா உறைக்கிற மாதிரிச் சொன்னனான். இப்ப பார்த்தா..” அதற்கு மேல் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள் மங்களம்.

முன்னுக்கு விறாந்தையில் விமலாவின் தந்தையார் என்ன பேசுவது என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். சாய்மனைக் கதிரையில் காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல பொசிந்து கொண்டு இருந்தது. ஒரே ஒரு பிள்ளை எண்டு செல்லமா வளர்த்தன் இப்பிடிச் செய்வாள் எண்டு நான் கொஞ்சமும நினைக்கேலையே.. தனக்குள் புலம்பினார் அந்த பாசமுள்ள தந்ததையார்.

வாசலில் யாரோ சத்தமிடுவது கேட்கவே மூவரும வாசலிற்கு வந்து பார்தனர். அங்கே ரஞ்சன்.

“விமலா.. நீ வா என்னோட.. இனியும் இவயளோட இருக்கலாம் எண்டு நினைக்கிறியே !” வாசலில் வந்து விடுக்காகச் சத்தமிட்டான் ரஞ்சன்.

அப்பாவியான விமலாவின் தந்தை குமரேசன் செய்வதறியாது திகைத்து நின்றார். அக்கம் பக்கத்து வீட்டுச் சனங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்த்தொடங்கிவி்ட்டது.

இந்த வேளையில் விமலா குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய முன்வீட்டுக்காரன் சுந்தரம் வெளியே வந்து குமரனுடன் வாக்கு வாதப்படத் தொடங்கினான். இருவரும் பேச்சு முத்தி கைகலப்பில் ஈடுபடத் தலைப்பட்டனர்.

இந்த வேளையில் விமலா ஒரு புதுமைப் புரட்சி செய்யத் தலைப்பட்டாள். சட சட வென்று வெளியே வந்தாள்.

“ரஞ்சன் சயிக்கிள எடு நாங்க போவம்.. இங்க நிண்டு தேவையில்லாம சண்டை போடாத” விடு விடு எனப் பேசி முடித்தாள்.

ஒரு கணம் அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களில் முதலில் சுதாகரித்துக் கொண்டது விமலாவின் தாயார்தான்.

முன் முற்றத்திற்குச் சென்று வாய்க்கு வந்த படி திட்டத்தொடங்கினாள். பின்ன என்ன அவளுக்கு வலிக்காதா. 21 வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த் தன் மகளை நேற்று வந்தவன் இப்படி அலேக்காக தூக்கி சயிக்கிளில ஏத்திக்கொண்டு போறத எந்தத் தாய்தான் பார்த்துக் கொண்டு இருப்பாள். கோபத்தின் உச்சக் கட்டமாக மண்ணை வாரி ரஞ்சனையும் விமாலாவையும் நோக்கி வீசி திட்டத்தொடங்கினாள்.

அன்றைக்குப் பிறகு தாயையும் தந்தையையும் விமலா சந்திக்கவில்லை. சில தடவை பருத்தித்துறை சந்தையில் கண்ட போதும் அவர்கள் இவளுடன் கதைக்கவில்லை. பின்னர் தற்போது அவர்களின் பெறா மகனின் உதவியுடன் கனடாவில போய் இருக்கினம் என்று அறிந்து கொணடாள். அவர்களும் இவளைத் தொடர்புகொள்ளவில்லை இவளும் அவர்களைத் தொடர்புகொள்ளவில்லை.

சிந்தனையில் மூள்கியவாறே சமையலில் ஈடுபட்டு இருந்தவளை வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு கனவுலகில் இருந்து மீண்டாள். வாசலில இருந்து கூப்பிட்டது ரஞ்சனின் அக்கா சிவரஞ்சினி.

“வாங்கோ..மச்சாள்..”

“அம்மா என்னபாடு??” வழைமையான கேள்வி.

“அதே நிலைமைதான் மச்சாள்” இவளும் வழமையான பதிலைச் சொன்னாள்.

பெற்ற தாய் வருத்தத்தில் வருந்தும் போது புதிதாய் வந்த மச்சாளிடம் அதைப் பாரமாகக் கருதி விட்டுக்கொடுத்த பெருமை இந்த சிவரஞ்சினியைச் சேரும்.

தாய் இருந்த அறையினுள் சென்ற சிவரஞ்சினி தாயை ஒருக்கால் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். வழமை போலப் பின்னர் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.

“அம்மா எப்பிடி யெல்லாம் இருந்தவ தெரியுமே??. அவர் ஒருக்கால் கூட மற்றயவளிட்ட ஒண்டும் கேக்கிறதில்லை இப்ப இப்பிடி இருக்கிறா” விமலாவிற்கு இவையெல்லாம உறைக்கவில்லை காரணம் தினம் தினம் கேட்கும் புலம்பல் தான் இது.

“ரஞ்சனக் கூட உன்ன மாதிரி நல்ல மனசிருக்கிற உன்னட்ட இருந்து..”

“இப்ப என்னத்துக்கு மச்சாள் தேவையில்லாம வேற விசயங்களக் கதைக்கிறியள்” சிவரஞ்சினியின் புதிய அலட்டலைக் தன் அரட்டல் மூலம் கட்டுப்படுத்தினாள் விமலா.

ஒரு நாள் கடற்தொழிலுக்கு விமலாவின் கணவன் ரஞ்சன் சென்றான். கடலில் இலங்கை கடற்படையின் பீரங்கிப்படகின் சுடுகலனின் கோரப்பிடியில் இவர்கள் சென்ற படகு மாட்டுப்பட்டது. படகில் சென்ற அனைவரும் மீண்டு வந்துவிட்ட போதும் ரஞ்சன் மட்டும் வரவில்லை. இன்றுடன் ஆண்டுகள 4 கழிகின்றன. ஆயினும் விமலா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.

தற்போது சிவரஞ்சினி வேறுவிடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவளின் கடைசி மகனின் குறும்பு தொடக்கம் தென் இந்தியாவின் பொதிகை சானலில் நேற்று அவள் பார்த்த எம்.ஜி.ஆர் இன் படம் வரை புட்டுப் புட்டு வைத்தாள். விமலாவும சும்மா ஒப்புக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.

“இந்த அம்மா மனுசி போய் துலைஞ்சுட்டுது எண்டா எனக்கும் விடுதலை கிடைச்ச மாதிரி. நானும் அடிக்கடி இங்க வந்து நேரத்த மினக்கடுத் தேவையில்ல” கூறியவாறே விடைபெற்றாள் சிவரஞ்சினி.

சிறிது நேரத்தில் விடைபெற்றுக் கொண்டு சிவரஞ்சினி சென்று விட்டாலும் அவள் தொடங்கின கதை விமலாவின் மனக் கண்ணின் முன் ஓடத்தொடங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது.

மச்சாளிற்கு மாமி செத்தாத்தான் விடுதலை. எனக்கு மாமியும் செத்துப் போனால் யார் இருக்கினம்??. நானும் இந்தக் கடலில விழுந்து சாக வேண்டியதுதான்.

எனக்கு எண்டைக்கும விடுதலையில்லை. விடுதலை எண்டு நினைச்சு வீட்டில இருந்து நான் வெளிக்கிட்ட நாளில இருந்து விடுதலை இல்லாமப் போயிட்டுது. உண்மையான விடுதலை நான் வீட்டில அப்பா அம்மாவோட இருக்கேக்கதான் இருந்தது.

குசினியின் ஓரத்தில் இருந்து விமலாவின் விசும்பல் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. அடுப்பில் இருந்த மீன்கறி கருகத் தொடங்கி விட்டதை அறிவிக்கும் முகமாக அவ்விடத்தில தீய்ந்த வாடை அடிக்கத் தொடங்கியது.

5 October 2006

29 : FLAMES போட்டுப் பாருங்க

ஒரு படத்தில சிலம்பரசன் FLAMES போட்டுக்காட்டி அதில அஜித்குமாரையும் சாலினியையும் போட முடிவு M என்று வந்ததே ஞாபகம் இருக்கா!

அந்த முயற்சியை இப்போ யாரோ புண்ணியவான் மென்பொருளாகச் செய்துள்ளார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பெயரையும் உங்கள் காதலி பெயரையும் இட்டுப்பாருங்கள் முடிவு வரும்

இனி FLAMES இல் உள்ள ஒவ்வொரு எழுத்துக்குமான கருத்துகளை ஒரு தடவை ஞாபகப்படுத்திவிடறேனே!

Fநண்பி அல்லது நண்பன்
Lகாதலன் அல்லது காதலி
Aவெறும் எதிர்ப்பால் கவர்ச்சி
M - திருமணம்
E - எதிரி
Sஅட சகோதரி இல்லீங்க ஸ்வீட் ஹாட் அப்படி எண்டு வரும்...

இனி செயலியை பதிவிறக்குங்கள்.....

4 October 2006

28 : ஜோதிகா & ஷாம் ஆங்கிலப் பாடலில்

MLTR – Micheal Learns To Rock என்பது ஆங்கிலத்தில் பிரபலமான இசைக்குழுவாகும். இந்த இசைக் குழுவின் பாடலை பிரபல இந்திப் பாடகர் ஷான் சில தடவை ஹிந்தியில் பாட யாம் கேட்டோம். ஆயினும் தமழில் அப்படியான முயற்சிகள் நடைபெறவில்லை.

ஆயினும் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் அதில் ஷாம் மற்றும் ஜோ தோன்றுகின்றார்கள். யாரோ அழகாக படத்தொகுப்பு செய்துள்ளார்கள். என் நண்பனிடம் இருந்து வீடியோவைப் பெற்றுக் கொண்டேன். நான் நினைக்கின்றேன் அதாவது இந்தப் பாடல்காட்சிகள் 12 பீ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என் ஆசைப் பாடலிற்கு என் ஆசை தமிழ் நட்சத்திரங்கள் வந்து போகின்றார்கள். பாடலின் வரிகளிற்கு ஏற்றவாறு படத்தொகுப்பு செய்துள்ளவரிற்கு பூப்போட்டுப் பாராட்டலாம். அந்தக் கனவான் யாரோ தெரியாது???

சரி இனி வீடியோவைப் பாருங்கள். வீடியோவின் கீழே ஆங்கில பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன...








Artist: Michael Learns To Rock Lyrics
Song: You Took My Heart Away Lyrics

Staring at the moon so blue
Turning all my thoughts to you
I was without hope or dream
Try to dull an inner scream
But you . . . saw me through . . .

Walking on a path of air
See your faces everywhere
As you melt this heart of stone
You take my hand to guide me home and now I’m in love

You took my heart away
When my whole world was grey
You gave me everything and a little bit more
And when it’s cold at night
And you sleep by my side
You become the meaning of my life . . .

Living in a world so cold
You were there to warm my soul
You came to mend a broken heart
You gave my life a brand new start
And now . . . I ’m in love

You took my heart away
When my whole world was grey
You gave me everything and a little bit more
And when it’s cold at night
And you sleep by my side
You become the meaning of my life . . .

Holding your hands
I won’t fear tomorrow
Here where we stand
We never be alone

You took my heart away
When my whole world was grey
You gave me everything and a little bit more
And when it’s cold at night
And you sleep by my side
You become the meaning of my life . . .
You become the meaning of my life . . .
You become the meaning
You become the meaning of my life . . .

The hottest songs from Michael Learns To Rock

3 October 2006

27 : கல்கியின் இ-புத்தகங்கள் (e-books) இலவசமாக

தமிழில் இ புத்தகங்களைக் காண்பது மிகவும் அரிதான விடையம். அண்மையில் கல்கியின் படைப்புகளை என் நண்பனிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.........
தமிழில் பல இ புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கலாம். கல்கியின் படைப்புகளை பதிவிறக்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும். (You need win rar & Acrobat Reader)

உள்ளடக்கப்பட்டுள்ள புத்தகங்கள்

1. பொன்னியின் செல்வன்
2. பார்த்தீபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. சோலைமலை இளவரசி

பதிவிறக்குக


மெலும் பல புத்தகங்களைப் பதிவிறக்க செல்க மதுரைத் திட்டம்.....

2 October 2006

26 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா??? சாபமாகுமா???

தமிழ் கணனியியலில் புதிய யுனிக்கோட் முறை ஒன்று தற்போது பரீட்சாத்தமாகப் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (TAmil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ் கணனியியல் ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன்.

யுனிக்கோடு (Unicode) முறைமை யுனிக்கோடு கான்சட்டேரியம் (Unicode Consortium) எனும் நிலையத்தால் அமைக்கப்பட்டது. இந்த முறையில் உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் இதில் பயன்படுகின்றன. ஏன் இந்த வலைப்பதிவு கூட யுனிக்கோடு முறமையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கான்சட்டேரியத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு அத்துடன் உத்தமம் ஆகிய நிறுவனங்களும் பங்கு வகிக்கின்றன.

IISCI முறைமையில் இருந்து யுனிக்கோடு முறைக்கு மாறும் போது மற்றய மொழிகளைப்போல இஸ்க்கி அமைப்பையே யுனிக்கோட் என்கோடிங்கில் தமிழ் பயன்படுத்தியது. இதன் காரணமாக Complex Script ஆக வரத்தேவையில்லாத தமிழ் மற்றய இந்திய மொழிகளைப்போல Complex Script ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Complex Script பொதுவாக லெவல் இரண்டு மொழிகள் ஆகும். எ-கா ஹிந்தி, சீனம், ஜப்பானீஸ். தமிழும் லெவல் இரண்டு மொழிகளுள் இதனால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஜேர்மன், பிரஞ்சு போன்ற மொழிகள் லெவல் ஒன்று மொழிகள் ஆகும்.

லெவல் ஒன்று மொழியாக இருப்பதனால் பல நன்மைகள் உள்ளன. அதாவது செயலி தயாரிப்பவரோ இயங்குதளமோ இதற்கான Core Level ஆதரவை வழங்க தேவையில்லை. இதன்காரணமாக சில குறைந்தளவு மென்பொருள்களிலேயே நாம் தமிழ் யுனிக்கோடைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது (MS Office, Open Office..etc). இது வருந்தத்தக்க விடயமாகும். Level one மொழியாக தமிழ் இருக்குமானால் ஆங்கிலம் பயன்படும் அனைத்து செயலியிலும் தமிழையும் பயன்படுத்த முடியும். இதன்காரணமாக தமிழ் கணனியியல் மிக வேகமாகப் பரவும் என்பதை மறுக்க முடியாது. மக் மற்றும் சில லினக்ஸ் (சில லினக்ஸ் இயங்கு தளங்கள் ஆதரவு வழங்குகின்றன) இயங்கு தளங்களில் (Operating System) இன்றும் தமிழ் யுனிக்கோடு ஆதரவு இல்லாமையைக் குறிப்பிட வேண்டும்.

போ என்ற எழுத்து உண்மையில் ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும் இது யுனிக்கோடு முறையில் 3 எழுத்துகளாக கணக்கெடுக்கப்படும்
1. இரட்டைக்கொம்பு
2. ப னா
3. அரவு
ஆகவே ஆங்கிலத்தில் 3 எழுத்து சேமிக்கப்படும் இடத்தில் தமிழில் ஒரு எழுத்து சேமிக்கப்படுகின்றது. இதனால் தமிழில் கோப்புக்கள் சேமிக்கத்தேவையான சேமிப்பகம் அதிகமாகும்.

இவ் விடயத்தை தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித் தமிழ் சங்கம், INFITT ஆகியன இணைந்து புதிய என்கோடிங் முறமையைத் தீர்மாணித்தனர். இதைப் பல்வேறு இடங்களில் பரீட்சித்தும் பார்த்து இது வினைத்திறனானது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பின்பு இத்தகவல் தமிழக அரசூடாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சு இத்தகவலை யுனிக்கோட் கொன்சட்டேரியத்திற்கு அறிவித்தது. ஆயினும் யுனிக்கோட் கான்சட்டோரியம் வினைத்திறனை கணக்கில் எடுப்பதில்லை அவர்கள் இதன் உறுதித் தன்மையை நன்கு ஆராயுமாறு கூறிவிட்டதுடன் ஒரு மாற்று வழியையும் பரிந்துரைத்தனர்.

மாற்று வழியானது யுனிக்கோடில் தனிப்பட்ட பயனர் பிரதேசத்தில இட்டு பரீட்சித்துப் பார்ப்பதே (However the Unicode consortium suggested an alternate measure to put the proposed All Character scheme in Private Use Area (PUA) of the Unicode space to startwith). அவ்வாறே தற்போது 16 பிட் முறைமையில் தமிழ் புதிய என்கோடிங் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரீட்சாத்த முயற்சியில் உள்ளது.

இதை பயன்படுத்திப் பார்க்க தமிழ் கணனி ஆர்வலர்கள், தமிழ் கணனி செயலி வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக இதில் உள்ள பிழைகள் தீர்க்கப்பட்டு புதிய யுனிக்கோடு முறமை தமிழிற்கு உருவாகும். இதன் மூலம் நாமும் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளைப்போல தமிழையும் பயன்படுத்தலாம். தமிழ் மொழியின் பயன்பாடு தமிழில் தற்போது இருப்பதை விட மேலும் இலகுவாகும். மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கும் புதிய கதவுகள் திறந்து விடப்படும் ஆகவே நீங்கள் இந்த விடயத்தை மற்றவர்களுக்குப் பரப்புவதுடன் உங்களால் ஆன உதவியையும் வழங்குங்கள்.

இதற்கு தற்போது எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. பல நிரலாளர்கள் இது குட்டையைக் குளப்பும் முயற்சி என்றும் மற்றய இந்திய மொழிகளில் இருந்து தமிழை இது தனியாக்கிவிடும் என்பதே அவர்கள் கருத்து. அதைவிட புதிய TUNE/TANE முறமைக்கு தமிழக அரசு தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற அரசுகளின் ஆதரவு பெறப்படவில்லை என்பது இவர்களின் வாதம்.

எது என்னவானாலும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே!

மூலங்களைத் தரவிறக்க...

1. http://groups.yahoo.com/group/tune_rfc/ - To Discuss regarding this matter in Yahoo group
2

28 September 2006

25 : வலைப்பதிவில் விளம்பரமிட்டு சம்பாதியுங்கள்

நீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.

கூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வசதி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.

மனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.

இவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.

கீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்



எனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.

நன்றி
ஜெ.மயூரேசன்

24 : வலையில் சம்பதியுங்கள்




நீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.

கூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வசதி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.

மனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.

இவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.

கீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்



எனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.

நன்றி
ஜெ.மயூரேசன்

27 September 2006

23 : Goal! The Dream Begins (2005) - திரைவிமர்சனம்

கோல் என்றால் இலக்கு என்று பொருள்படும். இந்தக் கதையும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு இளைஞனைப்பற்றிய கதையே ஆகும்.

மெச்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு களவாக குடி பெயர்கின்றது சன்டியாகோவின் குடும்பம். சன்டியாகோவின் தாயார் சிறு வயதிலேயே வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறிவிட தந்தையின் வளர்ப்பிலே சன்டியாகோவும் அவன் தம்பியும் வளர்கின்றனர். இவர்களுக்கு ஒரு பேத்தியாரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



மெச்சிக்கோவில் இருந்து வெளியேறி அமெரிக்காவினுள் நுழையும் தறுவாயில் அமெரிக்க எல்லைக் காவல் படையிடம் இருந்து மயிர் இழையில் இந்தக் குடும்பம் தப்புகின்றது. தப்பும் வேளையில் அந்தச் சிறுவனுக்கு கால்பந்தாட்டம் மீது இருக்கும் நாட்டத்தைக் காட்ட சிறு காட்சி ஒன்றைச் சேர்த்துள்ளார்கள். அதாவது இவர்கள் எல்லையில் உள்ள வேலியைக் கடந்து அமேரிக்காவினுள் நுழையும் தறுவாயில் மெச்சிக்கோப் பக்கம் சிறுவனின் பந்து விழுந்து விட அதைவிட்டு விட்டு வர மனமில்லாமல் தடுமாறுகின்றான். இருந்தபோதும் தந்தையின் அதட்டலுக்குப் பயந்து பந்தை விட்டு வருகின்றான். அப்போது அவன் முகத்தில் தெரியும் ஏமாற்றம் பாருங்கள்.......

பத்து வருடங்களின் பின்பு லாஸ் ஏஞ்சல் பிரதேசத்தில் இந்தக் குடும்பம் தங்கிவிட்டபோதும் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருக்கின்றது. இதே வேளையில் அந்தச் சிறுவன் தற்போது இளைஞனாகி நிற்கின்றான். அவனுக்குள் ஆசைகள் இருக்கின்ற போதும் தந்தை அவனது ஆசைகளை நோக்கி கனவுகளை வளர்க்க விடுவதில்லை. அப்துல் கலாம் கூறிய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற வாக்கியம் அவன் தந்தைக்குப் புரியவில்லை.

ஒரு ஏழைக் குடும்ப வாலிபன் தான் தன்னை மீறி கனவு காணக்கூடாது என்பதே அவரது வாதம். பல தடவை தந்தை மகனை இந்த விடயத்தில் கண்டிக்கின்றார்.

இதே வேளையில் இந்த இளைஞன் சன்டியாகோவின் கால்ப் பந்தாட்ட விளையாட்டுத் திறமையைப் பார்த்த இங்கிலாந்துக் காரர் ஒருவர் அவனுக்கு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார். அவரின் முயற்சகள் தோல்வி அடையவே சன்டியாகோவை இங்கிலாந்துக்கு வருமாறும் அப்படி வந்தால் தான் சந்தர்ப்பத்தை வாங்கித் தருவதாககும் கூறி விடை பெறுகின்றார்.

கனவுகளில் மீண்டும் மிதக்கும் இளைஞனுக்கு அவனது தந்தை கட்டுப்பாடு போடுகின்றார். இது வீண் கனவு என்றும் தன்னைப்போல தன் மகனும் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.



தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து செல்வதற்காக சன்டியாகோ பணம் சேர்க்கத் தொடங்குகின்றான். ஆயினும் சேர்த்த பணம் எல்லாம் அவனது தந்தை ஒரு ட்ரக் வேண்டப் பயன்படுத்தி விடுகின்றார். அனைத்தும் வெறுத்துப் போய் விரக்தியுடன் உலாவும் இந்த இளைஞன் அவனது பாட்டியின் உதவியுடன் தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து பயணம் ஆகின்றான்.

இங்கிலாந்தில் இளைஞன் தனது வெற்றிக்காக உழைப்பதையும் இறுதியில் ஒரு வெற்றிகரமான தொழில் ரீதியான கால்பந்தாட்ட விளையாட்டு வீரனாக மாறினானா என்பதுமே மிகுதிக் கதை.

இது வாழ்கையில் துவண்டு போய் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக இளைஞர்கள் தோல்வியில் துவண்டு விடாமல் இருக்க இந்தப்படம் உதவி செய்யலாம்.

இங்கிலாந்தில் அந்த இளைஞன் படும் துன்பம் இருக்கின்றதே பாருங்கள். அளவிட முடியாது. அவன் பிரகாசிக்க முடியாமல் திணறுவதையும் அவன் கற்பனைகள் கரைவதையும் பார்க்கும் போது எமக்கும் தான் கவலை ஏற்படுகின்றது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் அவன் முயற்சிகள் பயனளித்ததா என்பதை திருட்டு டீவிடீ வேண்டியாவது பாருங்கள்.

திரையில் நாயகன் நடிப்புடன் கொஞ்சம் திணறுவதைக் காண முடிகின்றது. ஆனால் கால் பந்துடன் சுழன்று சுழன்று கலக்குகின்றார். ஆயினும் மற்றய துணை நடிகர்களின் நடிப்பாற்றலால் நாம் இவரின் குறையைக் கண்டு கொள்ள முடிவதில்லை. குறிப்பாக இங்கிலாந்திற்கு இவரை அழைக்கும் முன்னய கால்பந்தாட்ட வீரர் மற்றும் சன்டீயாகோவின் காதலி போன்றோர் நடிப்பில் கலக்குகின்றனர்.

இத்திரைப்படம் ஆரம்பத்தில் இயக்குனர் மைக்கல் வின்டர் பொட்டம் என்பவருடனே ஆரம்பித்தது. ஆயினும் அவர் இதிலிருந்து விலகிக்கொண்டார். காரணம் இந்த திரைப்படத்தில் உண்மையான கால்பந்தாட்ட கழகங்களின் பெயர் பயன்படுவதால் பீஃபா (FIFA) தன் அனுமதியைப்பெற வேண்டும் என்று கூறிவிட்டது. கோபப்பட்ட மனுசன் விட்டுட்டுப்போய்விட்டார்.

இத்திரைப்படத்தின் மிகுதி 2 பாகங்கள் மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

பிகு : இந்த திரைப்படத்தில் பிரபல கால்பந்தாட்ட வீரர், முன்னய இங்கிலாந்து கால்பந்தாட்ட அணித் தலைவர் பெக்காம் ஒரு காட்சியில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

25 September 2006

22 : சீ.. துஷ்டனே


கதிரவன் சதிராடத் தொடங்குகின்ற நேரமது. பட்சிகள் கீச்சிடுகின்றன, வண்டுகள் ரீங்காரமிட்டவாறே அன்றலர்ந்த பூக்களைத் தேடி ஓடுகின்றன, தேனீக்கள் அவற்றுடன் போட்டியிடுகின்றன. எங்கோ தூரத்தில் ஒரு ஆண் குயில் துணை தேடி இசை பாடுகின்றது. இயற்கையை இரசித்தவாறே இரு துறவிகள் நடந்து வருகின்றனர். உலக நியதிகளைப்பற்றி அலசி ஆராய்கின்றனர்.

“குருவே ! இந்த வையகத்தில் இத்தனை அழகு இருந்தும் ஏன் இந்த மானிடர்கள் அதை விடுத்து அறியாமையில் மாட்டித் தவிக்கின்றார்கள்?”

“ஹூம்.... அது அவர்கள் ஊழ்வினை, முற்பிறப்பில் செய்த ஊழ் வினையை இப்பிறவியில் அனுபவிக்கின்றார்கள். எல்லாம் அவன் செயல்..”

“அப்போ விதியை வெல்ல முடியாதா குருவே!” ஆர்வமாகக் கேட்கிறான் அந்த இளவயது சீடன்.

“நிச்சயமாக முடியும் அதற்கு நீ இவ்வுலகின் நிலையாமையை முதலில் உணர வேண்டும். பணம், பெண், பாசம், உறவுகள் அனைத்துமே பொய் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயினும் பலபேர் அதை உணர்ந்து கொள்வதில்லை”.

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு வரும் வேளையில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆற்றில் அப்போது சிறிது அதிகமாகவே வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. அதற்குச் சான்றாக கரையிலே வெள்ளம் நுரைகளைத் தள்ளியவாறே துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டு இருந்தது.

இத்தனைக்கும் மேலே ஆற்றங்கரையிலே ஒரு அழகுப் பதுமை போன்ற இள நங்கை ஒருத்தி நின்று கொண்டு இருக்கின்றாள். அவள் கண்களில் பயம் தெரிகின்றது. ஆற்றின் வெள்ளம் பாவம் அவளை மிரட்சி அடைய வைத்துவிட்டது. மான் விழிகளை உருட்டி உருட்டி அங்கும் இங்குமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இவ் வேளையில் இரு துறவிகளும் இந்த நங்கையைத் தாண்டிப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.

“குளந்தாய்! ஏன் இங்கே தனியே நின்று கொண்டு இருக்கின்றாய். காட்டு மிருகங்கள் உலாவும் இடமிது. ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்று விடு” பரிவுடன் கூறினார் குருநாதர்.

“துறவியாரே! ஆற்று வெள்ளம் புரை கடந்து ஓடுகின்றது. பார்க்கவே பயமாக இருக்கின்றதே??”

“பயப்பட வேண்டாம். நான் இதைக் கடந்துதான் செல்லப் போகின்றேன்” இவ்வாறு கூறிவிட்டு குருநாதர் கட கட வென ஆற்றைக் கடக்கத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் ஆற்றைக் கடந்து மறு கரையேறிய துறவியார் தன் சீடனைக் காணவில்லையே என்றெண்ணி பின்னால் திரும்பிப் பார்த்தார். ஐயகோ! என்ன அநியாயம் அவரினால் அவர் கண்களையே நம்ப முடியவில்லை.

எனது சீடனா இது?? சீ இவனைப் போய் என் சீடனாக ஏற்றுக்கொண்டேனே. சலித்துக்கொண்டார் குருநாதர். ஆற்றின் மறு கரையிலே சீடன் அந்த நங்கையை தன் தோழில் தூக்கி அமர்த்தி ஆற்றைக் கடந்து கொண்டு இருந்தான்.

தற்போது சீடன் பெண்ணைக் கொண்டு வந்து மறுகரையில் இறக்கி விடுகின்றான். பெண் தலை கவிழ்ந்து நன்றி சொல்லி விட்டு அவ்விடத்தில் இருந்து நகர்கின்றாள்.

குருநாதர் எந்தப் பேச்சும் இன்றி விறு விறு என நடக்கின்றார். இவன் தன் குருவிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணராத சீடனும் இல்லை.

அந்திமாலை நேரமது, சிறிது நேரத்தில் இருட்டப்போகின்றது. சூரிய சம்ஹாரம் செய்துவிட்ட களிப்பில் சந்திரன் வானத்திலே நட்சத்திரங்களுடன் உலாவரத் தொடங்குகின்றான். எங்கும் குளிர்மை எதிலும் குளிர்மை. செடி கொடிகள் தம்மை சிலுப்பிக்கொண்டு நிற்கின்றன, பற்றைகளில் இருந்து பூச்சிகள் ஒரு வித ஒலியை எழுப்பி இருட்டின் மர்மத்திற்கு மர்மம் சேர்க்கின்றன. ஆயினும் குரு நாதரின் உள்ளம் மட்டும் அனலாய் கொதித்துக் கொண்டு இருந்தது.

“குருநாதரே! தங்களிடம் அடியேன் சிறு மாற்றத்தை காண்கின்றேன். தங்கள் உள மாற்றத்திற்கான காரணத்தை அடியேனுக்கு விளம்புவீர்களா?” பெளவியமாகக் கேட்டான் சீடன்

“சீ.. துஷ்டனே! உன்னைப் போய் என் சீடனாக ஏற்றுக் கொண்டேனே!. ஒழிந்து போ! என் கண்முன்னே நிற்காதே. நான் இவ்வளவு போதித்த பின்பும் அந்தப் பெண்ணைத் தீண்ட உனக்கு என்ன தைரியம்?. இக்கணம் முதல் நீ என் சீடன் இல்லை. உன்கை கறை படிந்த கை. பரந்தாமனிற்கு பூப் பறிக்கும் உன்கை அந்த பாவையைத் தொட எப்படித் துணிந்ததோ?”. தன் உள்ளக் கிடக்கை கொட்டித் தீர்த்தார் குருநாதர். ஆவேசத்தில் மேல் மூச்சு கீழ்மூச்சும் வாங்கிக்கொண்டார்.

“ஓ. அதுவா பிரைச்சனை! ஆற்றங்கரையில் சுமந்த பெண்ணை மறு கரையில் யாம் இறக்கிவிட்டோம். குருநாதா தாங்கள் இன்னும் சுமக்கின்றீர்கள் போல உள்ளதே!”

அத்தனை இருளிலும் தன் சீடன் ஒரு அறிவு வெள்ளமாக குருவிற்குத் தெரிந்தான். கண்களில் கண்ணீர் மல்க தன் சீடனை ஆரத் தழுவினார் அந்தக் குருநாதர். அவரின் கண்களில் இருந்து வழிந்தது ஆனந்தக் கண்ணீர் அல்ல தன் அறியாமையை எண்ணி வெட்கியதால் ஏற்பட்ட கண்ணீர்.

21 September 2006

21 : ஒரு பாடலில் ஒரு திரைப்படம்

ஒரு திரைப்படத்தை ஒரு பாடலினுள்ளேயே அடக்கி விடலாமா??? விடை ஆம். உங்களிற்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் கீழே உள்ள வீடியோ பாடலைப் பாருங்கள்.

திரைப்படத்தில் இருக்க வேண்டிய நாயகன், நாயகி, காதல், பெற்றோர் எதிர்ப்பு, கிராமம், மழை, பாடசாலை, தோல்வி, ஏக்கம் எல்லாமே உண்டு.






இது ஒரு சிங்களப்பாடல். சிங்களம் புரியாது என்று கவலைப் படாதீர்கள். பாடலைப் புரிந்து கொள்ள நீங்கள் வாழ்க்கையில் பத்து தமிழ் திரைப்படம் பார்த்திருந்தால் போதுமானது.

தற்போது இளசுகள் மத்தியில் பிரபலமாகி வரும் இராஜ் என்பவர் இசையமைத்த பாடல் இது. ஹிந்தி இசையில் களிக்கும் சிங்களவரை சிங்கள இசையை நோக்கி திரும்ப வைத்துக்கொண்டு இருப்பவர்களில் ஒருவர். இந்தப் பாடலில் நாயகியின் குடை பறந்து போய் ஒரு பஜுரோவில் மாட்ட அதை எடுக்க நாயகன் ஓடுவார். அந்த பஜுரோவில் குறுந் தாடியுடன் வருபவர்தான் இசைஅமைப்பாளர் இராஜ்.

பாடல் வரிகளை சிட்னி சந்திரசேகர என்பவர் எழுதியுள்ளார். பாடகியும் பிரபலமான சிங்களப் பாடகியே!.

பாடலில் வரும் நாயகன் கடைசியாக நடந்த Sirasa Super Star (American Idol போன்ற சிங்கள இளைஞர்களுக்கான போட்டி) ல் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். அருமையாகப் பாடலை அனுபவித்துப் பாடியுள்ளார். இவரின் உண்மையான பெயர் மலித் இந்தப் பாடலிலும் இவரின் பெயர் மலித் என்றே பயன்பட்டுள்ளது.

நாயகனின் நாயகி பாடசாலையில் நடனம் ஆடுவதைப் ஒளிந்து நின்று பார்க்கின்ற போது தலமை ஆசிரியர் அதைக் கண்டு நாயகனைக் கண்டிக்கின்றார் அப்போது நடக்கும் உரையாடலை ஒரு உதாரணத்திற்கு உங்களிற்காக தமிழில் தருகின்றேன்.

த.ஆ : மலித் இங்க என்ன செய்யிறாய்?

மலித் : ஒன்றும் இல்லை சேர்

த.ஆ : என்ன பாக்கிறாய் உள்ளுக்குள்ள பெரஹெரா வருகுதா?

மலித் : ஓம் சேர்... இல்ல சேர்

நாயகி நடப்பதைப் பார்த்து சிரிக்கின்றார் (பாடலில் இவரின் பெயர் சஞ்சலா)
த.ஆ : ஓம் சேர்! இல்ல சேர்! நீட்டுடா கையை

மலித் கையை நீட்டுகின்றான் அடிகள் வீழ்கின்றது. சஞ்சலாவின் முகம் கறுத்து அழத் தொடங்குகின்றார். சஞ்சலாவின் நடன ஆசரியர் சஞ்சலாவிடம் கேட்கின்றார்..

“மலித்திற்குத்தானே அடி வீழ்ந்தது சஞ்சலா என்னத்திற்கு அழுகின்றாய்??”

இவ்வளவிற்குப் பின்பும் என்ன தயக்கம் கிளிக் செய்து பாடலைப் பாருங்களேன்.

20 September 2006

20 : தமிழில் தட்டச்சிட வாருங்கள்

உங்கள் பிரவுசரில் தமிழில் டைப் செய்ய வேண்டுமா? ரொம்ப சுலபம்!









எ-கலப்பை என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள். எ-கலப்பையை




http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3



என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.



மேற்கண்ட வலைப்பக்கத்தில் மூன்று வகை சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன:



அஞ்சல், பாமினி, தமிழ்நெட்99.



உங்களுக்குத் தமிழ் தட்டச்சு முறை (யளனகபக) தெரியாது என்றால் eKalappai 2.0b (Anjal) என்ற இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.



எ-கலப்பையை இன்ஸ்டால் செய்ய...



முதலில் இங்கே



http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3 க்ளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.



அது zip ஃபைலாக டவுன்லோட் ஆன பின் அதை unzip செய்யுங்கள். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ekalappai20b_anjal.exe என்ற ஃபைலைப் பார்க்கலாம். அதை டபுள்க்ளிக் செய்யுங்கள்.









வலப்பக்க ஓரத்திலுள்ள Install என்ற பட்டனைத் தட்டுங்கள்.







அடுத்து வரும் பெட்டியில் Next என்ற பட்டனைத் தட்டுங்கள்.







இதையடுத்து வரும் பெட்டியில் I accept this license என்ற வாக்கியத்திற்கு முன் உள்ள குட்டிப் பெட்டியில் க்ளிக் செய்து டிக் செய்யுங்கள்.







பிறகு Next-ஐத் தட்டுங்கள்







அப்புறம் இன்னொரு முறை Next. இதற்குப் பின் எ-கலப்பை இன்ஸ்டால் ஆகிவிடும்.







அடுத்து வரும் பெட்டியில் Close-ஐ க்ளிக் செய்யுங்கள். இன்னும் ஒரே ஒரு க்ளிக் பாக்கி இருக்கிறது.









அடுத்த பெட்டியில் Finish பட்டனை க்ளிக் செய்யுங்கள்.











இப்போது உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழே சிஸ்டம் ரேயில் K போட்ட ஒரு ஐகனைப் பார்க்கலாம்.



முன்னேற்பாடுகள்



நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா, நோட்பேட், எம்.எஸ். வேர்ட் என்று எந்த புரோகிராமைத் திறந்து வைத்திருந்தாலும் எ-கலப்பையைக் கொண்டு அதில் டைப் செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் எ-கலப்பையைத் தயார் செய்ய வேண்டும்.







மேற்சொன்ன K ஐகனை ரைட்க்ளிக் செய்யுங்கள். Keyman Configuration... என்பதைத் தேர்ந்தெடுங்கள்.











இப்போது வரும் பெட்டியில் UNICODETAMIL என்பது டிக் ஆகியிருக்கும்.



பெட்டியில் வலப்பக்கம் கீழே Alt என்பது டிக் ஆகியிருக்கும், அதன் அருகில் 2 என்ற எண் இருக்கும். இதுதான் நீங்கள் தமிழ் விசைப்பலகைக்கு மாறுவதற்கான குறுக்குவழி. Alt விசையை அழுத்திக்கொண்டு 2-ஐத் தட்டினால் தமிழில் டைப் செய்யலாம். மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற அதே குறுக்குவழியைத் தட்டலாம். இப்போது இந்தப் பெட்டியில் OK பட்டனைத் தட்டுங்கள்.



தமிழில் டைப் செய்யத் தொடங்குங்கள்









முதலில் Alt + 2 தட்டுங்கள். இப்போது K என்ற ஐகன் 'அ' என்று மாறியிருக்கும்.



'அஞ்சல்' விசைப்பலகையில் என்பது ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வரும். அதனால்தான் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் கூட எந்தச் சிரமமும் இன்றி எ-கலப்பை, முரசு அஞ்சல் போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துகிறார்கள்.



உதாரணமாக, 'தமிழ்ச் செல்வி' என்று தமிழில் வர ஆங்கிலத்தில் thamizs selvi என்று டைப் செய்ய வேண்டும். 'அன்பு' என்பதற்கு anbu; 'இன்றைய பெண்ணின் இணைய இதழ்' என்று அடிக்க 'inRaiya peNNin iNaiya ithaz'.



தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன ஸ்பெல்லிங் வருமோ அதை அடித்தால் தமிழ் வந்துவிடும். 'ந'வுக்கு w, 'ஃ'-க்கு q என்று ஒரு சில விஷயங்களை மற்றும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த விரிவான வரைபடத்தை ஒரு முறை பார்த்தால் போதும்...



ஒரு வேளை வைத்துக்கொள்ளுங்கள் அவசரத்திற்கு செயலியை நிறுவமுடியாமல் இருப்பதாக. அப்படியான நேரங்களில் பயன்படுத்தக் கூடியதே சுரதாவின் பக்கம். இங்கு உங்களிற்கு தேவையான தட்டச்சு தளக்கோலத்தை தேர்ந்து எடுத்து தட்டச்சு செய்யலாம். பின்பு அங்கிருந்து பிரதி செய்து உங்களிற்கு தேவையான இடத்தில் ஒட்டிவிடலாம்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm


தமிழில் டைப் செய்வது அவ்வளவு ஈஸி! உங்கள் டைப்பிங் வேகம் பழகப் பழக அதிகமாகும். இப்போதே உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிடுங்கள்!



இனி அனைத்து கோப்புகளிற்கும் தமிழில் பெயரிடலாம். ஏன் இன்னும் தயக்கம் ஆரம்பியுங்கள்.


இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் நான் எழுதவில்லை இணையத்தில் பெற்றுக்கொண்டது. நான் எழுதப் போவதைவிட அழகாக எழுதியுள்ளதால் வெட்டி யொட்டியுள்ளேன். தகுந்த இடங்களில் மாற்றங்களும் மேலதிக தகவலும் சேர்த்துள்ளேன்.

19 September 2006

வாழ்க்கையின் நான்கு கட்டங்கள்

பொதுவாக வாழ்க்கையில் பல கட்டங்களைத் தாண்டுகின்றோம். சிறு வயதில் விளையாட்டுகள் வயது வந்ததும் பொறுப்புக்கள்... இப்படி பட்டியல் நீளும்..

கீழே உள்ள படத்தைப் பாருங்கள் வாழ்க்கையின் நான்கு பருவத்தில் தேவைப்படும் நான்கு திரவங்கள்...

Photobucket - Video and Image Hosting

பொ(ய்)ன் மொழிகள்

  • நீங்கள் படித்து எந்த சார்டிபிகேட்டும் (Certificate) வாங்கலாம் ஆனால் உங்கள் டெத் சார்ட்டிபிகெட்டை உங்களால் வாங்க முடியாது
  • நீங்கள் ஏர்டெல்லோ டயலோக்கோ வைத்திருக்கலாம் ஆனால் தும்மும் போது உங்களுடன் வருவது ஹட்ச் மட்டுமே
  • இன்ஜீனியரிங் காலேஜில் படித்து இன்ஜினியர் ஆகலாம் பிரசிடன் காலேஜில் (President College) படித்து பிரசிடன் ஆக முடியுமா?
  • மெக்கானிக்கல் இன்ஜின்னீயர் மெக்கானிக் ஆகலாம் ஆனால் சாப்வேர் இன்ஜினீயர் சாப்வேர் ஆக முடியுமா?
  • தேனீ்ர் கோப்பையில் தேனீரைக் காணலாம் ஆனால் உலகக் கோப்பையில் உலகத்தைக் காணமுடியாது
  • கீ போட்டில் (Key board) கீகளைக் (Key) காணலாம் ஆனால் மதர் போட்டில் (Mother board) மதரைக் (Mother) காணலாமா?


அன்புடன்

மயூரேசன்

15 September 2006

17. ஆவிகள் பற்றி கண்ணதாசன்

(1).மொபைல் கோர்ட் நீதிபதிகள்.

உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை.

ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.

ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.

பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.

சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம்.

திடீரெண்டுஅவர் விபூதி கொடுப்பாராம்;;;;;;;;, வெறும் கையிலேயே விபூதி வருமாம்

குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.

முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார், நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.

இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்கிருக்கும் கட்டத்துக்குள் ஒரு கரண்ட் என்னை இழுக்கிறது, நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். ‘கிருஷ்ணா !; ‘கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது.

சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இதே போல் பன்றிமலை சவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.

அவசை ஒரு நாள் பார்க்கப் போனேன்.

அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.

அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகின்றது.

நெருப்பு என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் சுடுகிறது.

சந்தனம் என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் மணக்கின்றது.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.

நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் ‘முருகா’ என்பார். எங்பிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்துவிடுகின்றன.

திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன்.

கோவை ஜெயில் ரேடில் 1950 ம் ஆண்டில் நான் கங்கியிருந்தபோது, என்னிடம் ஒரு சாமியார் வந்தர். அவர் இரண்டு ரூபாய்கள்தாம் என்னிடம் கேட்டார், கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் காகிதத்தில் ‘கெட்டது நடக்கும்’ என்றும், ஒரு காகிதத்தில் ‘நல்லது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று ‘நல்லது நடக்கும’ என்ற காகிதத்தில் ஏறிற்று.

ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை.

வீதியிலே வித்தை காட்டுகிறவன். உரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாக்கான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே.

இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

‘சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் வீழுந்தது., எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும், அசைக்க முடியாத உண்மை.

இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகின்றனர் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.

குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன.

கீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.

இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.

இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன.

இரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.

மனிதர்களாகவோ, மிருகங்கடாகவோ தோன்றுகின்றன.

ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவாகள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.

உண்மையில், இவை மொபைல் கோட் நீதிபதிகளாகவே விளங்குகின்றன.



மூலம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்

இதில் என்னுடைய எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை. அனைத்தும் கண்ணதாசன் கூறியவை.

தம்மை கடவுளாக மக்கள் முன் அடையாளப்படுத்துபவர்கள் பற்றி எனக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை ஆனால் பலர் இப்படியானவர்களை நம்பியே தீருவோம் என்று அலைகின்றனர். இலங்கையில் இருந்து கூட பெட்டி கட்டிக்கொண்டு வருவார்கள். இதில் பிரபல சிங்கள அரசியல் வாதிகள் கூட அடக்கம் என்பதுதான் நகைப்பான விடையம்.

நான் இப்படி என் நண்பனிடம் அலுத்துக்கொண்டபோது அவன் கூறினான். இந்துக்களை வேற்று மதக்காரர் மதமாற்றம் செய்வதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்குத்தான் வரவேணும் என்றது போல அவயள் எப்பிடியும் இந்துவாத்தானே இருக்கப்போகினம். என்னிடம் அப்போது அவனுக்கு கொடுக்க பதில் இருக்கவில்லை உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ என்ன தயக்கம் பகிர்ந்து கொள்ளுங்கள்...........

14 September 2006

பிளாக்கர் பீட்டா (BETA) ஒரு துன்பியல் நிகழ்வு

கையைச் சுட்ட பிளாக்கர் பீட்டாவும் கைவிரித்த பிளாக்கர் உதவிக்குழுவும்

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல நன்றாக வேலை செய்து கொண்டு இருந்த எனது பிளாக்கரில் தேவையில்லாமல் சில மாற்றங்கள் செய்யப்போய் இறுதியில் கையைச் சுட்டுக்கொண்டதுதான் மிச்சம்.

ஒரு நாள் வேலை செய்து கொண்டு இருக்கும் போது தேவையில்லாமல் பிளாக்கர் பீட்டாவிற்கு எனது பிளாக்கரை மாற்றினேன். அவ்வளவுதான் எனது பளாக்கர் கெட்டு குட்டிச்சுவரானது.

எழுத்துகளெல்லாம் ஏதோ நண்டுக்கால்கள் போல தெரிய ஆரம்பித்தன. மறுமொழி இட்டவர்களின் பெயர்கள் எல்லாம் ஏதோ போலத் தெரிந்தன. நானும் என்னால் முடிந்த பரிசோதனைகளை செய்து இருந்ததையும் கெடுத்ததுதான் மிச்சம். தமிழ் மணத்தின் கருவிப்பட்டை முதலானவையும் செயல் இழந்தது. தேன் கூடு மட்டும் வேலை செய்தது. கடைசியாக புதிய வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியதாகிவிட்டது.

இதன் போது பிளாக்கர் உதவிக் குழுவிற்கு நான் உதவி கேட்டு அனுப்பிய கடிதமும் அவர்கள் அனுப்பிய பதிலும் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள். யாருக்காவது உதவி செய்ய விருப்பமென்றால் அவர்களிடம் சொல்லுங்கள் பிளாக்கர் பீட்டாவிற்கு மாற வேண்டாம் என்று. கையைச் சுட்டவர்கள் பட்டியல் மோசமாக நீள்கின்றது. இனியும் தமிழ் வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவை இழக்காமல் இருக்க இந்தத் தகவலைப் பரப்புவோம்.

அன்புடன்,
மயூரேசன்

Hi there,

Thanks for writing in. I'm afraid that once you migrate your account to
Blogger in beta, you can't switch back to your old Blogger account. We
apologize for any inconvenience and we hope you enjoy our new features.
Additionally, please rest assured that we are working hard to polish
Blogger in beta and fix every bug that arises as soon as possible.

Thank you for your continued patience with these issues.

Sincerely,
Danish
The Blogger Team



Original Message Follows:
------------------------
From: Jeyakumaran Mayooresan
Subject: requst to roll back from beta
Date: Sat, 2 Sep 2006 05:52:24 -0700 (PDT)

Hi there,
I have moved to blogger beta. But it's not supporting Tamil scripts as
the previous versions. It makes me loose my viewers. Please help me to roll
back from blogger beta. I can't work with beta anymore. Please help me.
http://blogmayu.blogspot.com
Thanking you
J.Mayooresan
Management and Information Tech.
Faculty of Science
University of Kelaniya
Sri lanka.

இந்தவார வலைத்தளம்

எனது வலைப்பதிவில் ஒவ்வொரு வாரமும் ஒரு வெப்தளத்தை அறிமுகப்படுத்துவதாக உத்தேசம். அதன்படி இந்தவார வெப்தளத்தை பற்றிய தகவல்கள் இதோ!

நம் அன்றாட இணை அனுபவத்தில் ஒவ்வோரு இணையத் தளமும் தமக்கென ஒரு படிவத்தை நிரப்பி அங்கத்தவரானாலே இங்கு இருக்கும் சேவையைப் பெறலாம் என அலுப்படிப்பது இன்று சகஜமாகி விட்டது.

இலவச சேவைகளைக் கூட அங்கத்தவருக்குத்தான் தருவோம் எனக்கூறி ஒரு பெரிய படிவத்தையும் நிரப்பத்தருவார்கள். அதில் அம்மா பெயர், அப்பா பெயர், நீங்க நெட்டையா குட்டையா, கறுப்பா சிவப்பா என எரிச்சலூட்டும் கேள்விகளைக் கேட்பர். இதில் இருந்து விடுதலை பெற ஒரு தளத்தை அமைத்திருக்கின்றார்கள்.

நீங்கள் http://www.bugmenot.com என்ற முகவரிக்கு சென்று அங்குள்ள பெட்டியில் உங்களுக்கு தேவையான இணைய முகவரியின் பெயரை இட்டு தேட வேண்டியதுதான். உங்களுக்கு தேவையான இணைய பக்கத்திற்கான பல பயனர் பெயர் இரகசியக் குறி கிடைக்கும்.

ஒவ்வொரு பயனர் பெயருடனும் அதன் நம்பிக்கை வீதத்தையும் காட்டியிருக்கின்றமை சிறப்பு அம்சமாகும். நீங்கள் கூட இங்கு விருப்பமானால் ஒரு தளத்திற்கான பயனர் பெயர் இரகசியச் சொல்லை உள்ளிடலாம். என்ன அதுக்கெல்லாம் ஒரு சேவை மனப்பாங்கு வேண்டும்.

11 September 2006

நண்பன் தனேஷின் கவிதைகள்

"செருப்பில்லாமல் நடக்கும் போதுதான்
முள் குத்துகிறது,
நீ இல்லாமல் நடக்கும் போதுதான்
வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!"

"மரணப்பொழுதில்,
என் கண்கள் வாங்கிக்கொண்டு போகும்
கடைசிப் பரிசு
உன் முகமாக இருக்கட்டுமே!"

"நான் : போ! போ! போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் பண்ணிட்டுப்போ
நீ : என்ன?
நான் : அதான் ........ காரியம்"

உன் கால் தடம் எனும் கவிதைக்கு
இசை அமைத்துக்கொண்டு போகிறது
உன் கொலுசு !!!

நீ வாழ்வதால்தான்
இது பூவுலகம்
இல்லையென்றால்
வெறும் உலகம் !!!

நெடு நேரமாக என் பாடப்புத்தகத்தின்
ஒரே பக்கத்தில் நிற்கின்றேன்
அதில் உன் புகைப்படத்தை
வைத்திருப்பதால் !!!!


எனது பல்கலைக்கழக நண்பனின் காதல் கவிதை இங்கே அரங்கேறுகின்றது....

AVG இலவச வைரஸ் ஸ்கானர்

Photobucket - Video and Image Hosting
AVG நிறுவனம் தமது வைரஸ் வருடியின் இலவசப் பதிப்பை வெளியிடுகின்றமை இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளது. பல நிறுவனங்கள் தமது வைரஸ்கானரை கொள்ளை விலைக்கு விற்கும் போது ஏ.வி.ஜி இவ்வாறு செய்கின்றமை வரவேற்க வேண்டியதே.

இந்த இலவசப் பதிப்பை நீங்கள் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த முடியாது. வீட்டுப் பாவனைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆயினும் தரமுயர்த்தங்கள் (Updating) தொடர்ந்தும் இலவசம். இதன் காரணமாக புது வைரஸ்கள் உங்கள் கணனியைத் தாக்காமல் பாதுகாக்கலாம். உங்களுக்கு தேவை ஒரு இணைய இணைப்பே.

இணைப்பு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை செயலியை நெட் கபேயில் பதிவிறக்கி வீட்டில் இன்ஸ்டால் செய்யுங்கள். அதே போல தரமுயர்த்திகளையும் பதிவிறக்கி வீடு கொண்டு சென்று உங்கள் செயலியை தரம் உயர்த்துங்கள். என்ன இரட்டை வேலை அவ்வளவுதான்.

உங்களுக்கு தொழில்நுட்ப உதவி போன்றவை தேவையென்றால் நீங்கள் எ.வி.ஜி பிளஸ்சை பதிவிறக்க வேண்டும். ஆயினும் இது பணம் கொடுத்து வாங்க வேண்டிய செயலி. 40 நாட்கள் பரீட்சாத்தமாகப் பாவிக்கலாம். அதன் பின்பு பணம் செலுத்தியே ஆக வேண்டும்.

இனியும் என்ன யோசனை பதிவிறக்க வேண்டியது தானே???

இலவச பதிப்பை பதிவிறக்க

9 September 2006

நினைவுகள் III

அப்போது வயது சுமார் நான்கு இருக்கும். அன்றய தினம் எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் அக்டோபர் 15, 1988. அதாங்க எனக்குப் பிறந்தநாள். ஐந்தாவது வயது தொடங்குகின்ற நாள். காலையில் வழமை போல அம்மா, அப்பாவின் வாழ்த்துக்கள் மற்றும் உறவினரின் வாழ்த்துக்களும் வந்து சேர்ந்து கொண்டது. அத்துடன் அன்று பாலர் பாடசாலைக்கும் கொஞ்சம் சாக்லேட் வாங்கித்தருவதாக அப்பாவேறு கூறி இருந்தார். எனக்கோ ஒரே குஷி.........

வாழ்க்கையில் முதல் தடவையாக வீட்டிற்கு வெளியே என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றேன். அதனால் கொஞ்சம் பரபரப்பாகவெ இருந்தேன். நான் படித்த பாலர் பாடசாலை ஆசிரியையின் பெயர் பாலா ரீச்சர். இங்கு வழக்கம் என்ன வென்றால் காலையில் சென்றவுடன் அன்றய தினம் பிறந்ததினம் உள்ள மாணவர்கள் சாக்லட் பாக்கை அவரிடம் ஒப்படைப்பர். காலையில் இறைவணக்கம் முடிந்ததும் அவரின் தலமையில் அந்த மாணவனின் சாக்லெட் வினையோகம் நடக்கும்.

அப்பா காலையில் வேலைக்கு செல்லும் முன்னர் எனக்கு ஒரு பை சாக்லெட் வாங்கி வைத்து இருந்தார். அதை எடுத்து எனது நர்சரி பாக்கினுள் வைத்துக்கொண்டேன். காலை 7 மணி ஆகிவிட்டு இருந்தது. வழமைபோல அம்மா என்னை அவசரம் அவசரமாக நெர்சரியில கொண்டு சென்று விட்டா. நர்சரி வாசலுக்கு வந்ததும் எனது மனதில் ஒரு விபரீத ஆசை முளைக்க தொடங்கியது.

இவ்வளவு சாக்லெட்டையும் நானே சாப்பிட்டால் எப்பிடி இருக்கும். எதுக்கு இந்த பொடிங்களுக்கும் பெட்டைகளுக்கும் ஏன் என்ற அப்பா வேண்டித்தந்த சாக்லெட்ட குடுக்கோணும். என்ன சரியான கேள்விதானே???

நான் முடிவெடுத்து விட்டேன், அதாவது யாருக்கும் சாக்லெட் குடுப்பதில்லை எல்லாத்தையும் நானே சுடுவதென்று. வகுப்பில் நான் வழமைபோல சென்று உட்கார்ந்து கொண்டேன். அன்றய தினம் எனது வேறு ஒரு வகுப்புத் தோழனுக்கும் பிறந்த நாள். ஆகவே அவனின் ஒரு சாக்லெட்டையும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தது.

எல்லாம் முடிந்து வீடு வந்து விட்டேன். எனது நர்சரி பையில் இருந்து ஒவ்வொன்றாக சாக்லெட்டுகளை சாப்பிடத் தொடங்கினேன். நான் தொடர்ந்து சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை அம்மா கவனித்து விட்டார்.

“தம்பி! என்ன இது சொக்லெட் எல்லாம் சாப்பிடுறாய்?”

“அது அம்மா... வந்து நர்சரியில குடுத்தது போக மிச்சம் அது” மழலை மொழியில் பொய் சொன்னேன்.

அம்மாவும் நம்பிவிட்டா. பின்பு அன்று இரவு எல்லாரும் இரவுச் சாப்பாடு சாப்பிடும் போதும் நான் கையில் சாக்லெட்டுகளுடன் இருக்கின்றேன். இப்போது அம்மாவிற்கு சந்தேகம் வந்து விட்டது.

“மயூரேசன்! பொய் சொல்ல வேண்டாம். இண்டைக்கு சொக்லேட் ஒண்டையும் வகுப்பில குடுக்கேலத் தானே?” உறுக்கலாக அம்மா கேட்டார்.

இதை கொஞ்சமும் எதர்பார்க்காத நான் பயத்திலே அழத் தொடங்கிவிட்டேன். பிரைச்சனையை பெரிதாக்க விரும்பாத அம்மா அந்த பிரைச்சனையை அத்துடன் முடித்துக்கொண்டார். அத்தனை சாக்லெட்டும் எனக்கே சொந்தமானது.

மறு நாள் இன்னுமொரு சாக்லெட் பாக் வேண்டப்பட்டது. இந்தத் தடவை என்னிடம் பாக் தரப்பட வில்லை. அம்மாவே அதை நர்சரி ஆசிரியையிடம் கொடுத்தார். ஆகவே அம்மா புண்ணியத்தில் எனக்கு நர்சரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தேறியது. இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கும் விடையம் இது.

இதைப்போல நான் சங்கீதம் படித்தது கூட ஒரு சுவையான கதை. நான் சங்கீதம் படித்த ஆசிரியையின் பெயர் நற்குணம். நாங்களெல்லாம் செல்லமாக நரிக்குணம் என்று கூப்பிடுவம். இவரது அடித்தொல்லையில் இருந்து தப்பாத மாணவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்.

சுமார் 4 வயதிலேயே எனது சித்தியின் ஆசையின் பேரில் என்னை சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டனர். இந்த சித்தி என்னை இருக்கேலாமல் சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டு தன் பாட்டிற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார். இப்போ எனக்கு சங்கீதம் சொல்லித்தர வீட்டில் யாரும் இல்லை. மிகவும் கஷ்டமான காலம் அப்போதுதான் தொடங்கியது.

சங்கீத வகுப்பிலோ அடி வேண்டாத நாள் இல்லை. வீட்டில் அம்மாவிடம் அடி விழுந்தது என்று சொல்லவும் விருப்பமில்லை. அதாவது மானப் பிரைச்சனை. என்னோட அம்மா நான் அடி வேண்டின கதையை எல்லாருக்கும் ஏதோ நான் சாதனை செய்தது போல சொல்லுவா. எனக்கு அந்த நடத்தை கொஞ்சம் கூடப் பிடிக்கிறதில்லை. அதனால சங்கீத வகுப்பில் நடக்கிறத எல்லாம் அம்மாட்ட சொல்லுறதே கிடையாது.

பிஞ்சு மனது துடியாய் துடித்தது கடுமையான மன அழுத்தம்!!!!!!!.

அப்போது தான் நான் ஒரு முடிவெடுத்தேன் அதாவது ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து வகுப்பு செல்வது போல புறப்படுவது. பின்பு திருமலை நகரை வலம்வருவது. வகுப்பு முடியும் நேரத்திற்கு மீண்டு வீடு செல்வது.

மாலை மூன்று மணி அளவில் வீட்டில் இருந்து புறப்படுவது பின்னர் 5 மணி அளவல் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற தோறணையில் வீடு வருவது. இப்படியே காலம் போனது. எப்பிடியும் ஒரு ஆறு மாசம் என்னுடைய திருவிளையாடல் தொடர்ந்தது. என் கஷ்டகாலம் ஒரு நாள் வீதியில் என்னுடைய சங்கீத டீச்சரும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து விட்டனர். அம்மா கல்வி கற்பிக்கும் பாடசாலைக்கு அருகாமையில்தான் நான் சங்கீதம் கற்ற தட்சின காண சபா இருந்தது.

“என்ன உங்கட மகன் இப்ப சங்கீத கிளாசுக்கு வர்ரதில்ல ???”

“இல்லையே அவன் வாறவன். நேற்றுக் கூட வீட்டில இருந்து வெளிக்கிட்டவன் தானே !!” அம்மாவுக்கு தலைகால் புரியவில்லை பாவம்

“டீச்சர் உங்கட மகன் ஏதோ விளையாட்டு விடுறான். அவனை நாங்க கையும் மெய்யுமா பிடிப்பம்”.

“என்னால நம்ப ஏலாம இருக்குது இந்தப் பொடியன் இப்பிடி செய்யிறான் எண்டு!!” அம்மாவிற்கு எதுவுமே புரியவில்லை. மகன் இப்பிடி ஒரு பயங்கரவாதியாய் இருப்பான் என்று அவர் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை அதுவும் இத்தனை சிறிய வயதில். பாவம் அவன் அந்த ரீச்சரிடம் அடிபட்டது இந்த அம்மாவுக்குத் தெரியாது தானே.

மறு நாள் வழமை போல வீட்டிலிருந்து புறப்பட்டேன். சோனகவாடி பள்ளிவாசல் அருகாமையில் இரண்டு பொடியங்கள் கையைக்காட்டி என்னை மறித்தாங்கள். நானும் வலு கலாதியா சைக்கிளை ஓரம் கட்டிக்கொண்டு. “என்ன அண்ணா?” என்று கேட்டேன்.

கிட்ட வந்து சடார் என என்னை மடக்கிக் கொண்டான். அப்பிடியே அலேக்கா என்ன சபாக்கு கொண்டு போயிட்டான் அங்க அம்மா சங்கீத ரீச்சர் எல்லாரும் எனக்கு தட்சிணை போடக் காத்திருந்தாங்கள்.

“ரீச்சர்! இவனுக்கு அடிக்கிறதப் பற்றி கவலப்படாதீங்கோ. நல்லா அடிபோடுங்கோ அம்மா வேறு உத்தரவாதம் கொடுத்துவிட்டுப் போனார்.

அன்றிலிருந்து இரண்டு மாதத்தினுள் சங்கீதம் முதலாம் தரப்பரீட்சை வர இருந்தது. ஆகவே எனக்கு இரவு பகலாக கடும் சங்கீத வகுப்பு நடைபெற்றது. கடைசியாக சங்கீதப் பரீட்சையும் முடிந்தது. ஆயினும் அது வரைகாலமும் நான் பெற்ற அடிகள் கணக்கில் அடங்கா. இறுதியில் இதற்கு மேல் என்னால் படிக்க முடியாது என்பதை அம்மாவிற்குப் புரியவைத்து நான் சங்கீத வகுப்பில் இருந்து நின்று விட்டேன். ஆனால் இன்று தொடர்ந்து படித்து இருக்கலாம் என்ற ஒரு நெருடல் அடிமனதில் இருக்கத்தான் செய்கின்றது.

நினைவுகள் II

எனது முதல் நினைவுகளை முன்னர் உங்களுடன் பகிர்ந்திருந்தேன் இப்போது இரண்டாம் பாகம் வழமைபோல தேதி வாரியாக இல்லை ஏதோ எழுதும் போது ஞாபகத்திற்கு வரும் ஒழுங்கிலே எழுதுகின்றேன். பாரதி கூறியது போல நிஜம் மட்டுமே இங்கு கிடைக்கும் சுவாரசியமல்ல.....

ஆசிரியர்கள் இந்த சமூகத்திற்கு கிடைத்தற்கு அரிய பொக்கிசங்கள். சரஸ் ரீச்சர் அவ்வாறான பொக்கிசம் ஒன்றுதான். என் சிறுவயது ஆசிரியர் சரஸ் ரீச்சர். எனது வகுப்பாசிரியராய் இல்லாவிட்டாலும் பல தடவை எமக்கு படிப்பித்து இருக்கின்றா. “சரஸ் ரீச்சரிட்ட மாட்டி குடுக்கட்டா” என்று வெருட்டினால் எமக்கெல்லாம் ஒன்னுக்கு போகாத குறையாக வெருண்டுகொண்டு இருப்போம்.

ஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்........!. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது. டேய் சொரிடா!, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...

முன்னுக்கு இருந்து ரீச்சர் என்னை வரச்சொல்லி சைகை செய்வது எனக்குத் தெரிந்தது. சங்கு ஊதப்படப்போகின்றது என்பது மட்டும் வடிவாகத் தெரிந்தது. கிட்டப்போய் தலையை குனிந்து கொண்டு நின்றேன்!.

“என்னப்பு உன்னோட சொறிஞ்சவனா?” பக்கத்தில இருந்த பொடியனக் கேக்கிறா எண்டு பார்த்தா கேட்டது என்னத்தான். விடுவேனா நான்... அதுக்குப்பிறகு என்ன அவனுக்கு நல்ல பேச்சு விழுந்தது. என்னப்பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்பும் அம்மாவோட கதைத்தாவாம். இப்பெல்லாம் அவ என்னோட கதைக்கிறதில்ல காரணம் அந்த ஆசிரிய விளக்கு என்றும் அணையாத இறை விளக்குடன் இரண்டறக் கலந்துவிட்டது. கொடிய கான்சர் அவரைக் காவு கொண்டுவிட்டது.

ஒரு தடவை அம்மா, அப்பா அனைவரும் யாழ்ப்பாணம் சென்று விட்ட வேளையில் என்னையும் தங்கச்சியையும் பெரியப்பா வீட்டில் விட்டுச்சென்றனர். அந்த சமயத்தை இப்பவும் என்னால மறக்க ஏலாது. அம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது.

இது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். “உங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்”. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் “தம்பி! கோம்பைன் ஸ்டடி எப்படீ?” என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன்.

“மயூரேசன்! எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன?. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...”

“ரீச்சர்! அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்”

“இப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்?... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாத”

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்பாவின்ற லெட்டர் எண்டால் நானே எழுதி குடுத்து விடுவேன் ஆனால் பெரியப்பாவின் கையெழுத்தை எப்படிப் போடுவது. மாட்டுப்பட்டால் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?. இவ்வாறு பல சிந்தனைகள் என்னைச்சுற்றி கிலியூட்டியவாறே பறந்து திரிந்தது (செல்வன் அண்ணா கொசுவர்த்தி கொழுத்த இல்லாவிட்டால் சுட்டு வீழ்த்த சொல்லமாட்டீங்க என்று நம்புகின்றேன்). இறுதியில் முடிவு எடுத்தேன் கையெழுத்து போடுவதில்லை என்று.

ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் என்னை எழுப்பி மயூரேசன் நீ லெட்டர் இல்லாட்டி கிளாசுக்கு வராத என்று விரட்டி விட்டார். எனக்கென்ன போக்கிடமா இல்லை. திருமலை நகரில் இருக்கும் அழகான கடற்கரைக்குச் செல்வேன். இரு குண்றுகள் போன்ற அமைப்பு அவற்றிட்கிடையில் கடல் நீர். கரையிலே பரந்த மணற்பரப்பு இதைவிட வேறு என்ன வேண்டும்?. அதிகாலையில் கடற்கரையில் தேகாப்பியாசம் செய்பவர் தியானம் செய்பவர் என ஒரு கூட்டமே இருந்தது. அவற்றையும் அழகான சூரியோதயக் காட்சியையும் ரசிக்க கற்றுக்கொண்டேன். அத்துடன் பல் வேறு காரணங்களுக்காக ரீச்சரால் துரத்தப்படும் ஒரு குழுவும் என்னோடு இணைந்து கொள்ளும் (குணா-மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன், தேவானந்-இப்போ இலங்கை டெலிகொம்மில் வேலைசெய்கின்றான், விஜிதன்-கனடா போய்விட்டான் என்று சொன்னார்கள், சுதர்சன்- இவன்தான் வகுப்பின் ஜோக்கர், மற்றும் சிலர்). இப்படியே அவர் என்னைக்கலைப்பதும் பின்னர் நான் கடற்கரைக்குப் போவதுமாக இரண்டு வாரம் கழிந்தது. எனக்கு இதற்குமேலும் வகுப்புகளைப் பகிஷ்கரிக்க விருப்பமில்லை. அதாவது படிக்க ஆர்வம் வந்து விட்டது என்று வையுங்களேன்!

நான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.

“டேய்! உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே?”

“இல்ல அவர்தான் எழுதினவர்!”

“நீ எனக்கு பூ சுத்துறாய் என்ன?. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்” என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.

அதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........

ஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (மிசன் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....