15 September 2006

17. ஆவிகள் பற்றி கண்ணதாசன்

(1).மொபைல் கோர்ட் நீதிபதிகள்.

உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை.

ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.

ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.

பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.

சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம்.

திடீரெண்டுஅவர் விபூதி கொடுப்பாராம்;;;;;;;;, வெறும் கையிலேயே விபூதி வருமாம்

குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.

முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார், நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.

இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்கிருக்கும் கட்டத்துக்குள் ஒரு கரண்ட் என்னை இழுக்கிறது, நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். ‘கிருஷ்ணா !; ‘கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது.

சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இதே போல் பன்றிமலை சவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.

அவசை ஒரு நாள் பார்க்கப் போனேன்.

அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.

அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகின்றது.

நெருப்பு என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் சுடுகிறது.

சந்தனம் என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் மணக்கின்றது.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.

நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் ‘முருகா’ என்பார். எங்பிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்துவிடுகின்றன.

திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன்.

கோவை ஜெயில் ரேடில் 1950 ம் ஆண்டில் நான் கங்கியிருந்தபோது, என்னிடம் ஒரு சாமியார் வந்தர். அவர் இரண்டு ரூபாய்கள்தாம் என்னிடம் கேட்டார், கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் காகிதத்தில் ‘கெட்டது நடக்கும்’ என்றும், ஒரு காகிதத்தில் ‘நல்லது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று ‘நல்லது நடக்கும’ என்ற காகிதத்தில் ஏறிற்று.

ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை.

வீதியிலே வித்தை காட்டுகிறவன். உரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாக்கான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே.

இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

‘சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் வீழுந்தது., எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும், அசைக்க முடியாத உண்மை.

இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகின்றனர் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.

குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன.

கீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.

இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.

இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன.

இரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.

மனிதர்களாகவோ, மிருகங்கடாகவோ தோன்றுகின்றன.

ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவாகள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.

உண்மையில், இவை மொபைல் கோட் நீதிபதிகளாகவே விளங்குகின்றன.



மூலம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்

இதில் என்னுடைய எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை. அனைத்தும் கண்ணதாசன் கூறியவை.

தம்மை கடவுளாக மக்கள் முன் அடையாளப்படுத்துபவர்கள் பற்றி எனக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை ஆனால் பலர் இப்படியானவர்களை நம்பியே தீருவோம் என்று அலைகின்றனர். இலங்கையில் இருந்து கூட பெட்டி கட்டிக்கொண்டு வருவார்கள். இதில் பிரபல சிங்கள அரசியல் வாதிகள் கூட அடக்கம் என்பதுதான் நகைப்பான விடையம்.

நான் இப்படி என் நண்பனிடம் அலுத்துக்கொண்டபோது அவன் கூறினான். இந்துக்களை வேற்று மதக்காரர் மதமாற்றம் செய்வதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்குத்தான் வரவேணும் என்றது போல அவயள் எப்பிடியும் இந்துவாத்தானே இருக்கப்போகினம். என்னிடம் அப்போது அவனுக்கு கொடுக்க பதில் இருக்கவில்லை உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ என்ன தயக்கம் பகிர்ந்து கொள்ளுங்கள்...........

8 மறுமொழி:

said...

"கல் விழுவது"-எங்கள் வீட்டுக்கு 2 வீடு தள்ளி நடந்தது.
முக்கால்வாசி குடும்பம் ...
வேண்டாம் விடுங்க
இதுக்கொல்லாம் ஏன் என்ற ஆதாரம் காட்டமுடியாது.

said...

//வேண்டாம் விடுங்க
இதுக்கொல்லாம் ஏன் என்ற ஆதாரம் காட்டமுடியாது//
குமார் அவர்களே ரெம்பவுமேதான் பயந்து போனீங்க போல?????

said...

Yoov eppidi payamuruthiriye....

said...

Aha! english film parta madiri irundichi.[epdi kutti chathan irukadu unmaina adungala vaitu sri lankan armysa kolla try pannalame?]
priya

said...

//Aha! english film parta madiri irundichi.[epdi kutti chathan irukadu unmaina adungala vaitu sri lankan armysa kolla try pannalame?]//
Priya paarthuu... allittup pookap poorangal...

said...

//Aha! english film parta madiri irundichi.[epdi kutti chathan irukadu unmaina adungala vaitu sri lankan armysa kolla try pannalame?]//
Priya paarthuu... allittup pookap poorangal...

said...

நம்மளைப்பத்தி ஏதோ நியூஜுன்னு நினைச்சி ஓடியாந்தேன்.

எல்லாம் குட்டிச்சாத்தான்களைப் பற்றி இருக்கே!

ஓவர் டூ குட்டிச் சாத்தான்ஸ் கிளப்!

said...

//ஓவர் டூ குட்டிச் சாத்தான்ஸ் கிளப்! //

யாரு எங்களைக் கூப்பிட்டது?